வியாழன், 8 செப்டம்பர், 2016

ஒரு மொக்கைப் பதிவு

ஐயா
கொஞ்சம் நாளாக பதிவுலகில் காணவில்லை. பார்க்கிலேயே ரிசர்வ் செய்து உட்காந்திருக்கிறீர்களா? அல்லது ஆசுபத்திரியில் உடம்பு சரியில்லாமல் படுத்திருக்கிறீர்களா? அல்லது கணினி பழுதாகி விட்டதா? வீட்டுக்காரம்மா தடா போட்டு விட்டார்களா? பதிவு ஒன்றும் காணோம். ஒரு மொக்கையாவது எழுதுங்கள்.

இதோ ஒரு மொக்கை எழுதி விட்டேன்.

பதிவுலகம் நசிந்து கொண்டு வருகிறது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். ஒரு கால கட்டத்திற்குப் பின் எழுதுவதில் ஒரு சலிப்பு தோன்றுகிறது. குறிப்பாக ஆயிரம் பேருக்கு க் குறையாமல் பார்த்துக்கொண்டிருந்த பதிவுகளை சில நூறு பேர் மட்டுமே பார்க்கிறார்கள் என்றால் அந்த பதிவிற்கு மவுசு இல்லை என்று ஆகிறது.

கொள்வார் இல்லாமல் கடை நடத்துவதில் என்ன பயன்? அதனால் கொஞ்சம் விலகி விடலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான்.

என்னை ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பார்த்தார்கள். நான் ஒரேயடியாக மறுத்து விட்டேன். செத்தால் வீட்டில்தான் சாவேன், ஆஸ்பத்திரியில் சாகமாட்டேன் என்று சொல்லி விட்டேன்.