சனி, 7 நவம்பர், 2015

மேலும் சில சொந்தக் கருத்துகள்

என்னுடைய கம்பயூட்டரில் இணைய இணைப்பு இல்லாதபோது என் கைபேசியில் இருக்கும் இணைய இணைப்பை பயன் படுத்திப் பார்த்தேன். அதில் உள்ள தட்டச்சுப் பலகை மிகவும் சிறியதாகையால் என்னால் அதில் தட்டச்சு செய்ய முடியவில்லை. இரண்டாவது தமிழ் எழுத்துக்களை அதில் தரவிறக்கி வைக்காததால் ஆங்கிலத்தில்தான் தட்டச்சு செய்ய முடிந்தது.

என்னுடைய இணையம் செயல்படவில்லை என்று ஆங்கிலத்தில் ஒரு வரி மட்டும் தட்டச்சு செய்து வெளியிட்டேன்.

All bloggers to kindly note. My internet is not working for the last two days.  Hence my silence.

அதற்கு வந்த ஒரு பின்னூட்டத்தை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

அருமை அய்யா.. பாருங்க பதிவர்களே எங்க நைனா எவ்வளவு அருமையா...!

திருக்குறள ஒரே வரியில் அதுவும் வேற்று மொழியில சொல்லியிருக்காரு..

ஆனா அதுக்கு விளக்கம்தான் எனக்கு தெரியல காரணம்.. எனக்கு கன்னடம் படிக்க தெரியாது...

இதை நகைச்சுவை என்று எடுத்துக்கொள்ளவா அல்லது ஒரு பித்தனின் பிதற்றல் என்று எடுத்துக்கொள்ளவா என்று புரியாமல் குழம்புகிறேன்.

இந்த பின்னூட்டம் எனக்கு மனவருத்தம் தந்தது.

ஆனால் புலம்புவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?