ஞாயிறு, 17 மே, 2009

2009 தேர்தல் முடிவுகள்

ஆஹா, தேர்தல் முடிவுகள் வெளியாகி விட்டன. முடிவுகள் பலருக்கு ஏமாற்றமாக இருக்கும். என்னைப்பொருத்த வரையில் இந்த முடிவுகள் எனக்கு சாதகமானவையே. எப்படியென்றால் மு.க. கூட்டணி வெற்றி பெற்றுள்ளதால் அவர் மகிழ்ச்சியாக இருப்பார். அரசு ஊழியர்களின் சம்பள சீரமைப்பு நடக்கும். எனக்கும் அதனால் லாபம் உண்டு. ஆகவே இந்த தேர்தல் முடிவுகளை நான் வரவேற்கிறேன்.
இது சுயநலம் அல்லவா என்று கேட்கலாம். எனக்கு உரிமையானதைப் பெறுவது எப்படி சுயநலமாகும்? அடுத்தவனை ஏமாற்றி தன்னுடைய காரியத்தை செய்வதுதான் சுயநலம் என்று நான் நினைக்கிறேன். கருத்துக்கள் மாறுபடலாம்.
ஆக மொத்தம் தேவ.......யாக்களுக்கு இந்த தேர்தல் முடிவு மிகவும் ஏமாற்றமாக இருக்கும். குறிப்பாக வன்னியர் தலைவர் போட்ட கணக்கு தப்பாகிவிட்டது. இந்த ஆள் முக..வை விட்டு ஜெ. யைப்பிடித்தது முற்றிலும் தன் சுயநலத்திற்காகவே. கொள்கையாவது மண்ணாங் கட்டியாவது! இந்த ஆள் போட்டியிட்ட எல்லா தொகுதிகளிலும் மண்ணைக்கவ்வியது பலருக்கு திருப்தி அளிக்கும். எனக்கும் அவ்வாறே.
‘’கொங்கு முன்னேற்றப் பேரவை’’ என்று புதிதாக ஒரு கட்சியை கவுண்டர்கள் சார்பில் ஆரம்பித்தார்கள். முதலில் இது ‘’கொங்கு வேளாளக்கவுண்டர்கள் முன்னேற்றப் பேரவை’’ என்றுதான் ஆரம்பித்தார்கள். நானும் போயிருந்தேன். ஆரம்பித்த நாளே பல்டி அடித்து வேளாளக்கவுண்டர்கள் பெயரை நீக்கி கொங்கு முன்னேற்றப் பேரவை என்று பெயர் மாற்றம் செய்து விட்டார்கள். இதை எதற்காக ஆரம்பித்தார்கள், ஏன் பெயர் மாற்றம் செய்தார்கள் என்று நான் ஆராய்ச்சி செய்யவில்லை. இந்த மாதிரி ஜாதிக்கட்சிகளில் எனக்கு எப்போதும் ஆர்வம் இருந்த்தில்லை. இப்போதும் இல்லை. ஆகவே இந்த கட்சியும் மண்ணைக்கவ்வியதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.
எப்படியோ, இன்னும் 5 வருடத்திற்கு வண்டி ஓடும். அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்.
தொடரும்......