விவேகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விவேகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 ஏப்ரல், 2012

உடுமலையில் வாகன விபத்து


கேரளா மாநிலம் கண்ணனூரிலுருந்து இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த பத்து பேர் பழனி, கொடைக்கானல், தேக்கடி ஆகிய ஊர்களுக்குச் சுற்றுலா புறப்பட்டிருக்கிறார்கள். சொந்த வாகனம். குடும்ப அங்கத்தினர் ஒருவர் டிரைவர்.

இரவு சாப்பிட்டுவிட்டு புறப்பட்டிருக்கிறார்கள். சுமார் 10 மணிக்குப் புறப்பட்டிருக்கலாம். வண்டி ஓட்டினவர் அன்று முழுவதும் பகலில் தூங்கியிருக்கமாட்டார் என்று நம்புகிறேன். கண்ணனூரிலிருந்து உடுமலை சுமார் 350 கி. மீ. இருக்கும்.


இரவு தூங்காமல் 7 மணி நேரம் வண்டி ஓட்டுவது தூக்கம் விழித்து நன்கு பழக்கமான டிரைவர்களால் மட்டுமே முடியும். இளமை வேகத்தில் நான் தூக்கம் முழித்து ஓட்டுவேன் என்கிற அகம்பாவத்தினால் பலர் வண்டி ஓட்டுவது உண்டு. இந்த டிரைவரும் அப்படிப்பட்ட ஒரு அகம்பாவத்தினால் வண்டி ஓட்டியிருக்கவேண்டும்.


அதிகாலை 4 மணிக்கு யாருக்கும் தூக்கத்தில் கண் சொருகும். இதை உணர்ந்து வண்டியை நிறுத்தி ஓரிரு மணி நேரம் ஓய்வெடுத்திருக்கவேண்டும். அதை சட்டை செய்யாமல் ஓட்டி தூக்கக் கலக்கத்தில் பாலத்தில் தடுப்புக் கம்பிகளில் மோதி அந்தக் கம்பிகளைத் தாண்டி பாலத்தில் விழுந்து பாதி பேர் மேலுலகம் சென்று விட்டார்கள்.


இதில் குற்றம் புரிந்தவர்கள் ஓட்டுனர் மட்டும் இல்லை. கூட பயணம் செய்த பெரியவர்கள் அனைத்துப் பேர்களும் குற்றவாளிகளே. ஓட்டுனர் சோர்வடையும்போது எச்சரிக்கை செய்து ஓய்வெடுக்கச் செய்திருக்க வேண்டும்.


இந்த சம்பவத்தை விதியின் விளையாட்டு என்பதா அல்லது மக்களின் முட்டாள்தனம் என்பதா?


புது வருடத்திலாவது மக்கள் விவேகத்துடன் செயல்படுவார்கள் என்று நம்புவோமாக!