புதுப்பெண்டாட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதுப்பெண்டாட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 8 நவம்பர், 2013

நேத்து ராத்திரி தூக்கம் போச்சுதே!


போன வாரம் நான் இரண்டாவது பெண்டாட்டி கட்டினேன். ஆச்சரியமாக இருக்கிறதா? ஆனால் உண்மை. அதிலிருந்து ராத்திரியில் சரியாகத் தூங்க முடிவதில்லை. காலையில் இரண்டு மணிக்கு விழிப்பு வந்து விடுகிறது.

எழுந்தவுடன் அவள் முகத்தில்தான் முழிக்கிறேன். அவளுடன் என் நேரத்தை முழுவதுமாக செலவழிக்கிறேன். அவளை அணு அணுவாக ஆராய்கிறேன். புது டிரஸ் வாங்கிக்கொடுத்தேன். என்னால் முடிந்த அளவு அவளுக்கு சேவை செய்கிறேன். இருந்தாலும் அவள் என் வழிக்கு வரமாட்டேனென்கிறாள்.

இதனால்தான் காலையில் எழுந்தவுடன் "நேத்து ராத்திரி..." பாடவேண்டி வருகிறது. புதுப்பொண்டாட்டி என்றால் அப்படித்தான் இருக்கும் என்று அனுபவம் கூறுகிறது. என்னதான் புதுப்பொண்டாட்டி என்றாலும் இப்படி இருக்கக் கூடாது என்று அறிவு கூறுகிறது. நீங்கள் என்ன கூறப்போகிறீர்கள் என்று தெரியவில்லை.

கெழவனுக்கு வந்த வாழ்வைப் பாருங்கய்யா என்றுதான் கூறுவீர்கள் என்று தெரியும். ஆகவே மர்மத்தை விடுவிக்கிறேன்.

போனவாரம் என் நண்பர் ஒருவர் வைத்திருந்த மொபைல் போன் புதிதாக இருந்தது. அதைப் பற்றிய விவரங்கள் விசாரித்தேன். போனை கையில் வாங்கிப் பார்த்தேன். கண்டவுடன் காதல் என்பார்களே, அது அன்று என் வாழ்வில் வந்து விட்டது. அந்த போனை வாங்கியே தீரவேண்டும் என்ற தணியாத தாகம் தோன்றி விட்டது.

அடுத்த நாளே அந்த நண்பரையும் உடன் அழைத்துக்கொண்டு போய் அந்த போனை வாங்கியே விட்டேன். அதிலிருந்துதான் சோதனை பிறந்தது. "நேத்து ராத்திரி" பாட்டும் அன்றிலிருந்துதான் பாட ஆரம்பித்தேன்.

அந்த போன் இதுதான்.


Nokia Lumia 520


இது விண்டோஸ் 8 ஆபரேடிங்க் சிஸ்டம் உள்ள போன். விலை 9500 ரூபாய். கம்ப்யூட்டரில் என்னென்ன வசதிகள் உள்ளனவோ அதில் பாதிக்கு மேல் இதில் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் எனக்குத்தான் ஒன்றும் தெரியவில்லை.

ஒன்று மட்டும் புரிகிறது. என்ன வேலை செய்தாலும் உடனே காசு கேட்கிறது. ஏனெனில் எல்லா வேலைகளும் இன்டர்நெட் மூலமாகத்தான் நடக்கிறது. நான் தெரியாத்தனமாக முதல் நாள் ஏகப்பட்ட நேரம் அதில் செலவழித்து விட்டேன். அவ்வளவுதான் என் இருப்பில் உள்ள காசெல்லாம் காலி. (நான் BSNL Prepaid பிளானில் இருக்கிறேன்.)

அடுத்த நாள் முதல் வேலையாக டெலிபோன் ஆபீசுக்கு ஓடினேன். என்னய்யா இது அநியாயமாக இருக்கிறது. இந்த போன் ஒரே நாளில் என்னை ஓட்டாண்டி ஆக்கிவிட்டதே என்று மூக்கால் அழுதேன். அங்கிருந்த இன்ஜினியர் பொறுமையாக என் கதையைக் கேட்டுவிட்டு சொன்னார். இந்த போனில் நீங்கள் "டேட்டா பிளான்" ஒன்றை இன்ஸ்டால் செய்யவேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் எத்தனை ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தாலும் அத்தனையையும் இது விழுங்கி விடும் என்றார்.

அதுக்கு எவ்வளவு செலவு ஆகும் என்றேன். அதிகம் ஒன்றமில்லை, மாதம் 139 ரூபாய்தான். ஒரு மாதத்திற்கு 1 ஜிபி உபயோகித்துக் கொள்ளலாம் என்றார் சரியென்று அதற்கு பணத்தைக் கட்டி அந்த பிளானையும் கம்ப்யூட்டரில் ஏற்றினேன், புதுப்பெண்டாட்டிக்கு பூவும் அல்வாவும் வாங்கிக் கொடுத்துத்தானே ஆகவேண்டும். செய்கிறேன் வேறு வழி?

ஆகவே வாசக நண்பர்கள் எல்லாம் என் கதையைக் கேட்ட பிறகு ஜாக்கிரதையாய் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.