பந்தி நாகரிகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பந்தி நாகரிகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 9 நவம்பர், 2015

பந்தி நாகரிகம் தெரியுமா ?

                                                                                                                                                                   

பந்தி நாகரிகத்தைப் பற்றி பல கட்டுரைகள் இணையத்தில் விரவிக்கிடக்கின்றன. அவைகளிலிருந்து சில கருத்துகள்.

                                         
                 

இலையில் சாப்பிடுவதுதான் தமிழ்நாட்டு வழக்கம். இலையில் எது எதை எந்த இடத்தில் பரிமாறவேண்டும் என்ற முறையை இந்தப் படம் காட்டுகிறது.

கையினால் சாப்பிடுவதுதான் நம்ம ஊரில் பொதுவான பழக்கம். அதற்காக ஐஸ்கிரீமையும் கையினால்தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடிக்கப்படாது.

ஏன் விருந்து படைக்கவில்லை என்று யாரையும் யாரும் கேட்கக் கூடாது. விருந்தளிப்பது அவரவர்கள் உரிமை.

விருந்தினர்கள் கேட்கும் பதார்த்தங்களை அவர்கள் விரும்பும் அளவிற்கு பரிமாறுவதே நற்பண்பு.

தமிழ் நாட்டில் வலது கையினால் சாப்பிடுவதே முறை.

தனிப்பட்ட விருந்துகளுக்கு முறையான அழைப்பு இருந்தாலொழிய போகக்கூடாது. பொதுவான சத்திரங்களில் நடக்கும் அன்னதானங்களில் யார் வேண்டுமானாலும் அழைப்பில்லாமலேயே கூடப் போகலாம்.

சில சமயங்களில் சத்திரங்களில் அன்னதானம் நடக்காமல் போகலாம். அப்போது உணவு விடுதிகளில் சாப்பிட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

எந்த விருந்தானாலும் விருந்தினர்கள் தாங்களாக எந்தப் பொருளையும் கொண்டுவந்து பந்தியில் சாப்பிடக்கூடாது.

முறையான அழைப்போடு வந்திருக்கும் எந்த விருந்தினரையும் எந்த வகையிலும் அவமானப்படுத்தக்கூடாது.

விருந்தில் படைக்கப்படும் எல்லாவற்றையும் உண்பதே பண்பு.

விருந்து சாப்பிட்ட பின் கை கழுவ வேண்டும். சாப்பிடுவதற்கு முன்னால் கை கழுவுவது அவரவர்கள் விருப்பம்.

அப்புறம் இப்படி சாப்பிடக்கூடாது.

​இப்படித்தான் சாப்பிடவேண்டும்.




அவ்வளவுதானுங்க. எல்லாம் சரியா இருக்குங்களா? ஒண்ணும் தப்பாயிடலயே?