நாட்டு நடப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாட்டு நடப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 மே, 2017

7.பொது சேவை-2

         

 முதலில்  வெளியிட்ட நாள் -  ஞாயிறு, 22 பிப்ரவரி, 2009

             
 
                               Image result for இந்திய பார்லிமென்ட்
ஒவ்வொரு நாட்டிற்கும் தேசீய குணம் என்று ஒன்று உண்டு. உதாரணமாக ஜப்பான் நாட்டை ஒடுத்துக்கொண்டால் அந்த நாட்டு மக்கள் உழைப்பிற்கு பெயர் போனவர்கள். ஜெர்மனி நாட்டவர்கள எடுத்துக்கொண்டால் தரமான பொருட்களை தயாரிப்பதில் வல்லுநர்கள். ஐரோப்பியர்களை எடுத்துக்கொண்டால் ஒழுக்கமும்  எந்த சூழ்நிலையிலும் மனம் தளராமல் கடமையை செய்வதிலும் முனைப்பாக இருப்பார்கள். இப்படி ஒவ்வொரு நாட்டிற்கும் தனிப்பட்ட குணாதசியங்கள் இருக்கிறது.

ஆனால் இந்தியர்களை எடுத்துக்கொண்டால் அவர்களுடைய குணாதசியங்கள் என்று எதைக்கூறுவது என்பது பெரிய கஷ்டமான சமாசாரம் ஆகும். முக்கியமான ஒன்றை மட்டும் இங்கே சொல்கிறேன். நாடும் மற்றவர்களும் எக்கேடு வேண்டுமானாலும் கெட்டுப்போகட்டும்; நான் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்ற பரந்த மனப்பான்மை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.

 மற்ற எல்லா நாட்டு மக்களும் என்ன நினைக்கிறார்கள் என்றால் நாடும் மற்ற மக்களும் நன்றாக இருந்தால்தான் நானும் நன்றாக இருக்க முடியும் என்று எண்ணி அதற்காக தங்கள் கடமைகளை சரியாகச்செய்கிறார்கள். ஆனால் இந்திய நாட்டு மக்களோ என்றால் எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம் என்று செயல்படுபவர்கள். அப்படி ஏதும் வீடு எரியவில்லை என்றால் அவர்களே வீட்டிற்கு தீ வைப்பதற்கும் தயாராக இருக்கிறார்கள்.

அப்படி வைத்த தீயைத்தான் சமீபத்தில் சின்னத்திரைகளில் விரிவாகக் காட்டினார்கள். சட்டத்தின் பாதுகாவலர்கள் என்று மக்கள் நம்பிக் கொண்டிருக்கும் காவல் துறையினரும் சட்ட வல்லுனர்களும் உயர்நீதி மன்ற வளாகத்திற்குள் நடத்திய போராட்டம் ஒரு உச்ச கட்ட ஜனநாயகப் படுகொலை. அநாகரிகத்தின் எல்லைக்கோடு. அதுவும் ஒரு நீதிபதிக்கும் கூட தலையில் காயம் பட்டிருக்கிறது.

தடியெடுத்தவன் தண்டல்காரன் என்ற போக்கு எல்லா இடங்களிலும் பரவி விட்டது. எதிர்காலத்தில் மக்கள் வீதிகளில் சுதந்திரமாக நடமாடுவது கூட அச்சத்துடன்தான் செய்ய வேண்டும் என்ற நிலை உருவாகியிருக்கிறது. இப்படி ஏன் நடக்கிறது என்று யோசித்தால் அதற்கு காரணம் நமது நாட்டிற்கு என்று ஒரு தேசிய குணம் கிடையாது. தேசப்பற்று கிடையாது. நாட்டின் உச்ச ஸ்தாபனமான நாடாளுமன்ற சபையிலேயே மக்களின் நடவடிக்கைகளுக்கு முன் உதாரணம் இருக்கிறது. இந்த நாட்டின் தலை விதியையே நிர்ணயிக்கும் நாடாளுமன்ற உருப்பினர்களின் நடத்தையைப் பார்க்கும்போது உயர்நீதி மன்றத்தில் நடந்தவை மிகவும் சாதாரணமானவையே. இப்படிப்பட்ட நாட்டில் வாழ்வதற்கு நாம் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

 தொடரும்.....

புதன், 10 ஜூன், 2015

அஜினோ மோட்டோவும் மேக்கி நூடுல்ஸ்ஸும்

                                     
                                      Image result for maggi noodles images

இன்றைய தேதியில் மிக மிக ஹாட் டாபிக் இந்த "மேக்கி நூடுல்ஸ்" தான். இதைப் பற்றி நாமும் ஏதாவது சொல்லாவிடில் இந்திய நாடு எம்மை மன்னிக்காது. (இந்த தன்மைப் பன்மை ஒரு flow வுக்காக உபயோகப் படுத்தப்பட்டுள்ளது).

முதலில் எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டியது இந்த "பிபிஎம்" என்றால் என்ன என்பதாகும்.

ppm என்பது Parts per Million என்பதின் சுருக்கம். அதாவது பத்து லட்சம் கிராம் பொருளில் ஒரு கிராம் வேறு ஒரு பொருள் இருப்பதை இந்த அளவினால் குறிப்பிடுவார்கள். இது மிக மிகக் குறைந்த அளவில் அந்தப் பொருள் இருக்கிறது என்று புரிவதற்கான அளவு.

அது எப்படி இவ்வளவு குறைவாக இருக்கும் பொருளைக் கண்டுபிடிப்பார்கள் என்ற கேள்வி இதற்குள் உங்கள் மனதில் தோன்றியிருக்கவேண்டும். அப்படித் தோன்றவில்லை என்றால் இப்போது தோன்ற வைத்துக்கொள்ளுங்கள்.

இதற்காகத்தான் பல ஊர்களில் கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்து
"National Analytical Laboratory" என்கிற பெயரில் பெரிய பெரிய கட்டிடங்கள் கட்டி, அவைகளை பிரதம மந்திரி அல்லது ஜனாதிபதியை விட்டுத் திறக்க வைத்து, பல விஞ்ஞானிகள் அங்கு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். வெளிநாட்டிலிருந்து பல லட்சம் ரூபாய் செலவில் வாங்கிய பல பல நூதன பகுப்பறியும் கருவிகள் இங்கே இருக்கும்.

இந்தக் கருவிகளில்தான் இந்த மாதிரியான நுண்ணிய அளவில் இருக்கும் பொருளை பகுத்தறிவார்கள். இந்த சோதனைச்சாலைகளுக்கு ஒரு டைரக்டர், பல உதவி டைரக்டர்கள், கணக்கில்லாத ஆரய்ச்சியாளர்கள் என்று ஒரு பெரிய படையே இருக்கும். இப்போது இந்தியாவை ஆட்டிக்கொண்டு இருக்கும் மேக்கி நூடுல்ஸ் மாதிரி சமாச்சாரங்களுக்கான ஆணி வேர் இத்தகைய ஆராய்ச்சி சாலைகளில்தான் உதயமாகும்.

இந்த சோதனைச் சாலைகள் பற்றிய இத்தகைய செய்திகள் எல்லாம் சும்மா உங்கள் மாதிரி பொது மக்களை மயக்குவதற்காக சொல்லப்படும் சமாச்சாரங்கள். அங்கு என்ன நடக்கிறது என்பது எங்களைப் போன்ற இந்த மாதிரி சோதனைச்சாலைகளில் பணி புரிந்தவர்களுக்குத்தான் தெரியும். ஆனால் நாங்கள் உண்மையை வெளியே சொல்ல மாட்டோம் ஏனென்றால் எவனாவது தனக்குத்தானே சூன்யம் வைத்துக் கொள்வானா?

இப்போது என்ன நடந்திருக்கும் என்றால் இந்த மேக்கிக்காரன் யாரையோ உசுப்பி விட்டிருக்கவேண்டும். என்ன உசுப்பல்? வழக்கமான நடைமுறைகளில் ஏதாவது கசமுசா ஆகியிருக்கவேண்டும். விலைவாசிகளெல்லாம் தாறுமாறாக ஏறிக் கிடப்பதை இந்த மேக்கிக்காரன் புரியாமல் இருந்திருக்கவேண்டும்.. அதில் வந்த வினையாகத்தான் இருக்கவேண்டும்.

அதில் சம்பந்தப்பட்டவன் நாயைச் "சூ" காட்டுகிற மாதிரி தன் கீழ் இருக்கும் ஒரு டிபார்ட்மென்ட்டுக்கு ஜாடை காண்பித்திருப்பான்.  நம் ஆட்களுக்குச் சொல்ல வேண்டுமா?  "எள் என்றால் எண்ணையாக" நிற்பவர்களல்லவா? உடனே அரசு இயந்திரம் முடுக்கி விடப்பட்டு சாம்பிள்கள் சேகரிக்கப்பட்டு இந்த சோதனைச்சாலைகளுக்கு அனுப்பி பரிசோதனை செய்யச்சொல்லி இருப்பார்கள்.

அந்தச் சோதனைச்சாலையில் இருக்கும் டைரக்டரும் மற்றவர்களும் இந்த "சோதனைச்சாலைக்கு வந்த சோதனையைப் பார்" என்று வருத்தப்பட்டு, சோதனை இயந்திரங்களை தூசி தட்டி, துடைத்து இந்த சேம்பிளை பகுப்பாய்வு செய்து மேல் அதிகாரிகள் விரும்பும் முடிவை விரும்பியபடி தயார் செய்து அறிக்கை கொடுத்து விடுவார்கள்.

இந்த முடிவுகளைப் பற்றி செய்தித்தாள்களில் வந்த விவரங்களைப் பாருங்கள். காரீயம் 2.5 பிபிஎம் க்கு மேல் இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஐயா, துல்லியமாக சோதனை செய்திருந்தால் எவ்வளவு காரீயம் இருக்கிறது என்று தெரிந்திருக்கும் இல்லையா? அது எவ்வளவு என்று சொல்லலாம் இல்லையா? ஊஹூம், சொல்ல மாட்டமே? தன் கழுத்துக்கு தானே எவனாவது சுருக்கு மாட்டிக்கொள்வானா? சட்டத்தில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருக்கிறது. அவ்வளவுதான். மேட்டர் முடிந்து விட்டது. அப்பறம் நடப்பதெல்லாம் சட்டக்காவலர்கள் செய்ய வேண்டிய வேலை. அதற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை.

இதேபோல்தான் எம்எஸ்ஜி விவகாரமும். சட்டப்படி இருக்கவேண்டியதை விட மிக அதிகமாக இருக்கிறது.அவ்வளவுதான். எவ்வளவு என்று நாங்கள் சொல்ல மாட்டோம். அது எங்கள் வேலையல்ல. உண்மையான காரணத்தை இதற்குள் நீங்கள் யூகித்திராவிடில் நான் வருந்துவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்? ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரே ஓடையில் தண்ணீர் குடித்த கதை தெரியுமல்லவா? அதை நன்றாக நினைவில் கொள்ளுங்கள்.

சட்டக்காவலர்கள் தங்கள் வேலையைப் பொறுப்பாக கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள். மேக்கி விற்ற கடைக்கார ர்கள் எல்லாம் மேக்கி பேக்கட்களை கடைக்குப் பின்னால் கொண்டு போய் விற்கிறார்கள். ஆபீசர்கள் வந்து கேட்டால் "மேக்கியா, அப்படீன்னா என்ன சார் ? அப்படீன்னு கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த மேட்டர் சூடு தணிய கொஞ்ச நாள் ஆகும். சூடு எப்படி தணியும் என்று விவரமானவர்கள் அறிவார்கள். இதற்கு அதிக பட்சம் ஒரு ஆறு மாதம் ஆகலாம். அது வரையில் மேக்கி வாங்கி ஸ்டாக் வைத்திருப்பவர்கள் மேக்கி சாப்பிடுங்கள். மற்றவர்கள் எல்லாம் அவர்கள் வாயைப் பார்த்துக்கொண்டு ஆறு மாதம் பொறுத்திருங்கள். மேக்கி இதே பெயரில்  New Maggi என்றோ அல்லது வேறு ஏதாவது ஒரு பெயரிலோ வரும்.பிறகு எல்லோரும் மேக்கி சாப்பிடலாம்.

பின் சேர்க்கை. உங்கள் கவனத்திற்காக மட்டும்.

MSG எனப்படும்  குளுடாமிக் ஆசிட் பற்றி சில விபரங்கள்.

தினமும் ஒருவரது உணவில் 40 முதல் 50 கிராம் வரையிலான புரதமானது உள்ளெடுக்கப்படவேண்டும். புரதங்கள் பல்வேறு அமினோ அமிலங்களைக் கொண்டுள்ளன. இவற்றுள் 9அமிலங்கள் உடலுக்கு அத்தியாவசியமானவை. இவை தவிர்ந்த ஏனையவை உடலால் தொகுக்கப்படும் பால் இறைச்சி முட்டை ஆகிய விலங்குப் புரதங்கள் மிகவும் சிறந்த புரதங்களை கொண்டவை. இவற்றில் உடலுக்குத் தேவையான அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் காணப்படும். குளுடாமிக் ஏசிட் என்பதுவும் இத்தகைய அத்தியாவசிய அமினோ அமிலங்களில் ஒன்று.

குளுடாமிக் ஏசிட்டின் இராசயன அமைப்பு.


C5H9NO4                         

Image result for glutamic acid                 

அஜினோ மோட்டோ அல்லது மோனோ சோடியம் குளுடாமேட்/எம்எஸ்ஜி
- இராசயன அமைப்பு


C5H8NO4Na           



Image result for msg chemical structure

இரண்டிற்கும் உள்ள ஒரே வித்தியாசம் - எம்எஸ்ஜி யில் ஒரு ஹைட்ரஜன் அணுவிற்குப் பதிலாக ஒரு சோடியம் அணு சேர்க்கப்பட்டிருக்கிறது                                


மாம்பழத்தில் உள்ள குளுடாமின் அமிலம், குழந்தைகள் கவனம் செலுத்துவதற்கும், ஞாபக சக்திக்கும் ஊட்டமாக அமைகிறது.

MSG—or monosodium glutamate—is a flavor enhancer used in savory foods, especially Asian foods. It contains sodium, but only a third of the amount that you’d get from the same amount of salt.
MSG also includes glutamic acid (aka glutamate), an amino acid that’s found naturally in foods like tomatoes, mushrooms and soybeans and is the source of our fifth taste—umami.
In fact, we eat about 13 grams of natural glutamate a day on average, compared to only around half a gram from MSG.
Some people say they have an MSG allergy—or that MSG gives them headaches, worsens their asthma, causes chest pain or palpitations, or causes mild mood changes or other symptoms, all of which are collectively referred to as Chinese Restaurant Syndrome (because MSG is commonly found in Asian-style meals).
Contrary to popular belief, decades of research fails to support the link between MSG and these reported side effects.
Modest amount of MSG found in the typical Western diet is not linked to symptoms of Chinese Restaurant Syndrome, according to scientific literature from the 1970s to today.
No adverse symptoms were observed when people consumed MSG as part of a meal—even at high doses (up to 147 grams/day), according to a review of studies, published in 2000 in the Journal of Nutrition.
There’s one caveat though: eating MSG may lead to classic symptoms of Chinese Restaurant Syndrome when it is consumed solo and on an empty stomach.
In a 2013 study, researchers gave healthy adults about 10 grams of MSG on average (a fairly large dose) without any food.
Almost all of them experienced headaches, as well as short-term increases in blood pressure and heart rate.
But because MSG is generally used in small amounts as a flavoring (like salt), the likelihood that you’d eat it by itself is slim.
MSG might just be the most love-to-be-hated additive of the day, but the science fails to supports its “bad guy” reputation.

News:
Delhi health minister Satyendar Jain said, "Last week, we lifted 13 samples of Maggi for testing following media reports of these being unsafe for consumption. We found the masala samples, tastemakers of at least 10 such packets, had lead content beyond the prescribed limit of 2.50pm." Jain also said five samples of masala were found containing monosodium glutamate (MSG) without proper label declaration.

திங்கள், 31 டிசம்பர், 2012

இந்திய நாடு எப்போது உருப்படும்?


வருடக் கடைசியில் திரும்பிப் பார்த்தால் விரக்தியே மிஞ்சுகிறது. மக்கள் திருந்தி, இந்திய நாடு மறுமலர்ச்சி அடையவேண்டும் என்றுதான் அனைவரும் விரும்புகிறோம்.

ஆனால் அப்படி நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் இன்றைய நடைமுறையில் இருக்கிறதா? பல பதிவர்கள் மிக நம்பிக்கையுடன் பதிவுகள் எழுதுகிறார்கள். இந்தியா மறுமலர்ச்சி அடையும், அடைந்தே தீரும், என்றெல்லாம் எழுதுகிறார்கள். இந்தியா கண்டிப்பாக மறுமலர்ச்சி அடையும். எப்போது?

அடிப்படையிலிருந்து ஆரம்பமாக வேண்டும். ஒவ்வொரு தனி மனிதனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். இதற்கு நல்ல தலைவர்கள் வேண்டும். எப்போது நல்ல தலைவர்கள் உண்டாவார்கள். மக்கள் சகிக்க முடியாத துன்பங்களுக்கு ஆளாகும்போது அப்படிப்பட்ட தலைவர்கள் ஏற்படுவார்கள்.

ஆனால் நம் நாடு இவ்வளவு சீர்கெட்டிருந்தாலும் மக்களுக்கு வேண்டிய உணவு, உடை, உறைவிடம் கிடைக்கிறது. இந்த விஷயத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் விழிப்புடன் இருக்கிறார்கள். அடிமட்ட மக்களின் தேவைகள் எப்படியாவது அவர்களுக்கு கிடைக்கும்படியான திட்டங்களை நடைமுறைப் படுத்தி விடுகிறார்கள்.

அப்படி தங்களுடைய ஆதாரத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம் ஆகியவை எந்தக் கஷ்டமும் இல்லாமல் கிடைத்து விடுவதால் அவர்கள் இந்த அத்தியாவசியத் தேவைகளுக்கு அப்பாற்பட்டவைகளைத் தேட ஆரம்பித்து விடுகிறார்கள். அதில் சேர்ந்ததுதான் பலாத்காரம். வழிப்பறி, கொலை, கொள்ளை ஆகியவை.

கனவு காண்பதில் உள்ள சுகம் தனியானதுதான். திரு. அப்துல் கலாம் அவர்கள் இதற்கு வழிகாட்டிவிட்டுப் போயிருக்கிறார். நாமும் அந்த வழியில் சென்று இன்புறுவோம்.

வெள்ளி, 28 டிசம்பர், 2012

பெருகி வரும் வன்முறைகளும் போராட்டங்களும்



நாடெங்கிலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள், ஆள் கடத்தல், வழிப்பறி, சாலை விபத்துகள் ஆகியவை அன்றாட நிகழ்வுகள் ஆகிவிட்டன. வளர்ந்து வரும் ஒரு சமுதாயத்தில் இத்தகைய நிகழ்வுகள் அந்த சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக அமைகிறது.

நாட்டிலுள்ள மக்கள் இத்தகைய நிகழ்வுகளுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறார்கள். இத்தகைய போராட்டங்களினால் என்ன பயன் விளையும் என்று எனக்குத் தெரியவில்லை. தனி மனிதன் தன்னை மாற்றிக்கொண்டால் தவிர, இத்தகைய குற்றங்களை எவ்வாறு தடுக்க முடியும்?

அவன் எப்போது மாறுவான்? அப்படி மாறுவானா என்பதே ஒரு கேள்விக்குறியாக அல்லவா இருக்கிறது. போராட்டங்களை முன்னின்று நடத்தும் பல்வேறு அமைப்புகள் இந்த முயற்சியில் என்றும் ஈடுபடுவதில்லை. போராட்டம் நடத்த எங்கு என்ன காரணம் கிடைக்கும் என்று கழுகு போல் காத்திருக்கிறார்கள். அந்த மாதிரி ஒரு சம்பவம் நடந்தால் போதும், அதற்காக போராட்டம் ஆரம்பித்து விடுவார்கள்.

பலருக்கு போராட்டங்கள் அவர்களின் அடங்கிக்கிடந்த உணர்ச்சிகளுக்கு வடிகாலாய் அமைகிறது. இத்தகைய போராட்டங்களில் அவர்கள் என்ன செய்தாலும் யாரும் கேட்பதில்லை. பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துதல், கடைகளைச் சூறையாடுதல், பொது வாழ்வைச் சீர்குலைத்தல் ஆகியவை சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. இத்தகையோர்களுக்கு மற்றவர்கள் செய்யும் தவறுகளைத் தட்டிக்கேட்க என்ன தார்மீக உரிமை இருக்கிறது?

இத்தகைய போராட்டங்கள் ஓரிரு நாட்கள் நடந்து பின்பு முடிந்து விடும். அதன் பிறகு இந்த மாதிரியான இன்னொரு சம்பவம் நடந்தால் அதற்கு ஒரு போராட்டம் ஆரம்பிக்கும். இந்த தொடர்கதை நடந்து கொண்டேதான் இருக்கிறது. போராட்டம் முடிந்தவுடன் அனைவரும் அந்த சம்பவத்தை மறந்து விட்டு தங்கள் வழக்கமான வேலையைக் கவனிக்கப் போய்விடுகிறார்கள்.

இந்தப் போராட்டங்களில் ஈடுபடுகிறவர்கள் அனைவரும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்கள் போராடும் கொள்கைகளைக் கடைப்பிடிக்கிறார்களா என்பது சந்தேகமே. உதாரணத்திற்கு டில்லியில் இப்போது போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் மாணவர்கள், குற்றவாளிகளை உடனே தூக்கில் போடுங்கள் என்று கேட்கிறார்கள். இதே மாணவர்கள் செய்யும் ரேக்கிங்கில் ஒரு மாணவர் உயிரிழந்தால், உடனே அதில் சம்பந்தப்பட்ட மாணவர்களை தூக்கில் போட உடன்படுவார்களா?

வட இந்தியப் பெண்கள் தங்கள் கழுத்தில் அரை பவுனில், கண்ணுக்குத் தெரியாமல் ஒரு செயின் போட்டிருப்பார்கள். தமிழ் நாட்டில் ஒவ்வொரு பெண்ணும் குறைந்தது ஒரு ஐம்பது பவுனாவது போட்டுக்கொண்டுதான் விசேஷங்களுக்குப் போகிறார்கள். ஐம்பது பவுன் நகை இன்றைக்கு தங்கம் விற்கும் விலையில் ஏறக்குறைய பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் ஆகிறது. இதைப் பார்க்கும் ஒரு சாதாரண குற்றவாளி கூட கொலை செய்யும் அளவிற்குத் துணிந்து விடுகிறான்.

வீட்டில் லட்சக் கணக்கில் பணத்தைப் பீரோவில் வைத்து விட்டு அவன் ஊருக்குப் போய்விடுகிறான். பூட்டியிருக்கும் வீடுகளைக் குறிவைத்து திருடுபவர்கள் இன்று பெருகிப்போய் விட்டார்கள். இந்தப் பணம் அன்று இரவே திருட்டுப் போய்விடுகிறது.

இதை எவ்வாறு மாற்ற முடியும் என்று மக்கள் யோசிக்கவேண்டும். வெறும் போராட்டங்களினால் எந்தப் பயனும் ஏற்படாது என்பதை மக்கள் என்று உணர்வார்களோ அன்றுதான் நம் நாடு முன்னேற்றப் பாதையில் அடி எடுத்து வைக்கும்.

சனி, 13 அக்டோபர், 2012

இன்றைய நாட்டு நடப்பு


இன்றைக்கு புரட்டாசி சனிக்கிழமை. பெருமாளுக்கு உகந்த நாள். எப்படியாவது ஒரு நல்ல செய்தியுடன் ஒரு பதிவு போடலாம் என்று தினத்தந்தி செய்தித்தாளைப் படித்தேன. என்னுடைய அல்லது உங்களுடைய துரதிர்ஷ்டம் இந்த செய்திகள்தான் கிடைத்தன.

1.  கோபியில் ஈமு பண்ணை நடத்தி 8 கோடி மோசடி செய்த பெண் போலீஸ் உட்பட 3 பேர் கைது.
 
2.  கடன் வாங்கித் தருவதாக லட்சக்கணக்கில் மோசடி

3.  திருமணம் செய்வதாகக் கூறி பத்தாவது படிக்கும் மாணவியை கர்ப்பிணியாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் தலைமறைவு.

4. சுய உதவிக்குழுவினருக்கு கடன் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் ஏமாற்றிய "அப்ரோ" நிறுவனர் ஏசுதாஸ் கைது.

5.  வணிக வளாக லிப்டில் ஓவர் லோடு ஆட்கள் ஏறினதில் லிப்ட் ஒரு மணி நேரம் நின்றது.

6.  குடி போதையில் 3 வயது குழந்தையைத் தவிக்கவிட்ட தந்தை.

7.  பைனான்ஸ் கம்பெனி ஏஜண்டின் கணவர் அவமானம் தாங்காமல் தற்கொலை.

8.  15000 ரூபாய் லஞ்சம் வாங்கிய நில அளவையர் கைது.

9.  போர்ஜரி கடிதம் கொடுத்து அரசு மான்யத்தை சுருட்டிய மத்திய மந்திரி சல்மான் குர்ஷீத்.

நான் ரொம்ப நல்ல எண்ணத்துடன்தான் பேப்பரைப் படித்தேன். என் கண்ணில் பட்ட செய்திகள் இவை. வேறு நல்ல செய்தி ஏதாவது உங்கள் கண்களில் பட்டிருந்தால் தயவு செய்து பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும்.