நாடகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாடகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

கச்சத்தீவும் தமிழக மீனவர்களும்

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 50 பேர் சிறை பிடிப்பு - இலங்கை கடற்படை அட்டூழியம்

தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமருக்குக் கடிதம்.



இத்தகைய செய்திகளை பல வருடங்களாக, ஏறக்குறைய நான்கு நாட்களுக்கு ஒரு முறை செய்தித்தாள்களில் படிக்கிறோம். அடுத்த நிமிடம் மறந்து போகிறோம். இது ஏன் இப்படி நடக்கிறது?

ஒரு ஈழத்தமிழ் பதிவர் தன் பதிவில் எழுதியிருந்தார் - கச்சத்தீவு பல நூற்றாண்டு காலமாக இலங்கைக்கு சொந்தமான பகுதி. அதில் இந்திய நாட்டுக்கு எந்த உரிமையும் கிடையாது. ஈழத்தமிழர்களாகிய நாங்கள் ஏன் இதை வலியுறுத்துவதில்லை என்றால், ஈழப்போராட்டத்தில் இந்தியத் தமிழர்களின் அனுதாபமும் ஆதரவும் இப்போது எங்களுக்குத் தேவைப்படுகின்றது. அதனால்தான் நாங்கள் இதைப்பற்றி வாய் திறப்பதில்லை.

இதன் உண்மையை வரலாற்று ஆசிரியர்கள்தான் சொல்ல முடியும். சாதாரண இந்தியத் தமிழனான எனக்குத் தெரிந்ததெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன் இந்திய-இலங்கை அரசுகள் ஒரு ஒப்பந்தம் போட்டு, கச்சத்தீவில் இந்தியாவுக்கு எந்த உரிமையும் இல்லை என்று ஒத்துக்கொண்டார்கள் என்பதே.

சமீபத்தில் சென்னை நீதி மன்றம் ஒன்றில் கூட மத்திய அரசு இந்த நிலையை திட்டவட்டமாக எடுத்துச் சொல்லியிருக்கிறது என்று செய்தித்தாள்களில் படித்த ஞாபகம் இருக்கிறது. இருந்தும் தமிழக மீனவர்கள் ஏன் எல்லை தாண்டிச் சென்று மீன் பிடிக்கிறார்கள் என்றால் அங்கு மீன் அதிகமாகக் கிடைப்பதேயாகும். இந்த உண்மை எல்லோருக்கும் தெரியும்.

இருந்தாலும் இந்த சிறை பிடிப்பு, கடிதங்கள், மீனவர் விடுதலை என்கிற நாடகம் ஏன் தொடர்ந்து நடக்கிறது என்றால், வெறும் வாயையே எத்தனை நாளைக்குத்தான் மெல்லுவது? கொஞ்சம் அவல் இருந்தால் நல்லதுதானே என்கிற நடைமுறைத் தத்துவம்தான்.