தமிழினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழினம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 29 மே, 2016

தமிழன் என்பவன் யார்?

                              Image result for board meeting images
எங்கள் விவாதத்தில் முதலில் விவாதிக்கப்பட்ட பொருள் - தமிழன் என்பவன் யார்? என்பதே.

பல நூற்றாண்டு காலத்திற்கு முன் பாரதத்தின் தென் பகுதியில் தமிழர்கள் வசித்து வந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. இப்போதைய கேரளப் பகுதியும் தமிழ் நாடாகவே இருந்தது. தமிழகத்தில் மூன்று பேரரசர்கள் அதாவது சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். இந்த மூன்று அரசர்கள் ஆண்டு வந்த பகுதிகளில் உள்ளவர்கள் தமிழர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்.

அப்போது போக்குவரத்து வசதிகள் அவ்வளவாக இல்லாத காரணத்தால் மக்கள் ஒரு பகுதியிலிருந்து வேறு பகுதிகளுக்குப் போவது அரிதாக இருந்தது. ஆகவே இந்த மூவேந்தர்களின் ஆட்சிப்பகுதியில் குடியிருந்தவர்கள் தலைமுறை தலைமுறையாக ஒரே இடத்தில் குடியிருந்தார்கள். அவர்களுடைய பழக்க வழக்கங்கள் காலம் காலமாக மாறாமல் அப்படியே இருந்து வந்தன.

இவர்களே தமிழர்கள் என்று அழைக்கப்ப்ட்டார்கள். அவர்கள் வாழ்ந்த முறையே தமிழர்களின் கலாச்சாரம் என்று அழைக்கப்ப்ட்டது. இந்தக்காலத்தில்தான் அரசர்கள் தினமும் தங்கள் சபா மண்டபத்தில் வந்து உட்கார்ந்தவுடன் மந்திரியைப் பார்த்துக் கேட்கும் முதல் கேள்வி "மந்திரியே, மாதம் மும்மாரி பெய்கிறதா" என்பதே. மந்திரியும் இந்தக்கேள்விக்குப் பதிலாக, "ஆம் அரசே, மாதம் மும்மாரி பெய்கிறது" என்று பதில் கூறுவார்.

பிற்காலத்தில் போக்குவரத்து வசதிகள் பெருகின. தமிழ் நாட்டின் வளத்தினால் ஈர்க்கப்பட்டு பல தரப்பு மக்களும் இங்கே வரத்தொடங்கினார்கள். அதில் குறிப்பாக வட நாட்டிலிருந்து ஆரியர்களும் தெலுங்கு தேசத்திலிருந்து தெலுங்கர்களும் கன்னட தேசத்திலிருந்து  கன்னடர்களும் ஆவார்கள்.

இதன் பிறகே வர்ணாசிரம நியதிகள் தமிழ் நாட்டில் புகுத்தப்பட்டன. நான்கு வர்ணங்களும் ஒவ்வொரு வர்ணத்திற்குள்ளும் நூற்றுக்கணக்கான ஜாதிகளும் வரையறுக்கப்ப்ட்டன. ஒவ்வொரு ஜாதிக்கும் வாழும் முறைகள் தனித்தனியாக உருவாகின. இதன் பிறகுதான் மக்களிடையே சண்டை சச்சரவுகள் ஏற்பட ஆரம்பித்தன.

உன் ஜாதி பெரிதா, என் ஜாதி பெரிதா என்கிற போட்டி உருவாக ஆரம்பித்தது. இந்தப் போட்டியை சிலர் ஆதரித்தார்கள். ஏனென்றால் அவர்களுக்கு இதில் சில சௌகரியங்கள் இருந்தன.

இப்படி உருவானதுதான் ஜாதிகள். சில ஜாதிகள் தீண்டத்தகாதவை என்று குறிப்பிடப்பட்டன. சில ஜாதிகள் மேல் ஜாதிகள் என்று குறிப்பிடப்பட்டன. ஆளும் வர்க்கத்தினர் இந்த ஜாதி வேறுபாடுகளை தங்கள் சொந்த நலனுக்காக நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

மன்னர்கள் ஆட்சி மறைந்து ஆங்கிலேயர் ஆட்சி வந்தது. அவர்கள் ஆட்சியும் மறைந்து மக்களே மக்களை ஆட்சி புரியும் காலம் வந்தது. தற்போது அந்த முறைதான் இருக்கிறது. மக்கள் பல விதமான குண நலன்கள் உடையவர்களாய் இருந்தபடியால் யாரை ஆட்சி செய்ய அனுமதிக்கலாம் என்று யோசித்தபோது ஒரு நல்ல விடை கிடைத்தது. "தடியெடுத்தவன் தண்டல்காரன்" என்று ஒரு முது மொழி தமிழில் உள்ளது. அப்படியே தடியெடுத்தவர்கள் எல்லோரும் ஆட்சிக்கு வந்தார்கள்.

இந்தக் கால கட்டத்தில் பல தேசங்களிலிருந்து பல பாஷைகள் பேசும் மக்கள் தமிழ் நாட்டிற்கு புலம் பெயர்ந்து இங்கேயே பலமாக வேறூன்றி விட்டார்கள். ஆகவே தற்போது தமிழ்நாட்டில் இருப்பவர்கள் எல்லோரும் தமிழர்களா அல்லது மண்ணின் மைந்தர்கள் என்று சொல்லப்படுபவர்கள் மட்டும் தமிழர்களா என்ற குழப்பம் நிலவுகிறது. மண்ணின் மைந்தர்கள் என்று யாரை அடையாளம் காண முடியும்? "வந்தேறிகள்" என்று யாரைச் சொல்வது?

இந்தக் குழப்பங்களுக்குத்  தீர்வு வேண்டும் என்று வந்திருந்த தமிழ்த் துறைத் தலவரைக் கேட்டுக்கொண்டேன்.  அவர் நீங்கள் சொல்வதை எல்லாம் கேட்டவுடன் எனக்கு குழப்பம் அதிகமாகி விட்டது. எனக்கு ஒரு மாதம் அவகாசம் கொடுங்கள். நான் இதைப்பற்றி தீர சிந்தித்து ஒரு தெளிவான கருத்துடன் வருகிறேன். பிறகு நம் விவாதத்தைத் தொடரலாம் என்றார்.

அதுவும் சரிதான் என்று அவர்களை அனுப்பி வைத்தேன். அவர்கள் போவதற்கு முன் அவர்களுக்கு நல்ல சிற்றுண்டி பரிமாறப்பட்டது. அவர்களுக்கு கைச்செலவிற்காக ஒரு கவரும் கொடுக்கப்பட்டது.

இந்த மாதிரி விவகாரங்களைக் கவனிப்பதற்கு ஒரு நல்ல "பொது உறவுகள் அதிகாரி" இருந்தால் நல்லது என்று நாங்கள் நினைத்தோம். அதற்கு யாரைப்போடலாம் என்று யோசித்தபோது பிரபல பதிவர் திரு நடனசபாபதி அவர்கள் இந்த சங்கத்தில் பணி புரிய ஆசைப்பட்ட செய்தி தெரிந்தது. ஆஹா, நல்ல அனுபவம் வாய்ந்தவராயிற்றே, அவருடைய சம்மதத்தைக் கேட்டு அவரையே நம் சங்கத்தின் பொது உறவு அதிகாரியாக நியமனம் செய்து விடுவோம் என்று தீர்மானித்தோம்.

சனி, 2 ஆகஸ்ட், 2014

தமிழனென்று ஓர் இனம்


கல் தோன்றி மண் தோன்றாக் காலம் தொட்டு இப்பூவுலகில் வாழ்ந்து வரும் இனம் தமிழினம். பிற்காலத்தில் இவ்வினத்தில் சில புல்லுருவிகளின் சதியால் இனக் கலப்பு ஏற்பட்டது என்னமோ உண்மைதான். இருந்தாலும் தமிழினம் தன் தனித்தன்மையை இது வரையிலும் காத்தே வந்திருக்கிறது. இனியும் காப்போம் என்று மார் தட்டும் தனித்தமிழர்கள் இருக்கிறார்கள்.

தமிழினத்திற்கு எந்த அவமானம் ஏற்பட்டாலும் அவர்கள் தீக்குளிப்பார்கள் என்பது உறுதி. இந்த சூழ்நிலையில்தான் பார்பனர்களின் ஆதரவோடு செயல்படும் மோடி அரசு சம்ஸ்கிருத மொழித்திணிப்பை பின் வாசல் வழியாக கொண்டு வருகிறது. இதை தமிழினத்தின் காவலர்கள் கவனித்துக் கொள்வார்கள்.

சாமானிய மனிதர்களான நாம் என்ன செய்யலாம் என்று யோசித்ததில் ஒரு வழி  புலனாகியது. அதாவது தமிழ் மொழியில் வடமொழிக்கலப்பு உள்ளதா என்ற ஒரு சுய பரிசோதனை செய்யலாம் என்று தோன்றியது. அப்படிக் கலந்திருந்தால் அந்த வார்த்தைகளை நாம் பயன்படுத்தக் கூடாது. அதற்குப் பதிலாக ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இங்கு நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில சொற்களைக் கொடுத்திருக்கிறேன். அவைகளில் தமிழ் அல்லாத சொற்கள் எவை என்று பகுத்தறிந்து கூறுங்கள்.

ஆகாசம்
உபாயம்
நகம்
வீரன்
ஆனந்தம்
தோரணம்
பாடம்
சபை
மாயை
வீணை
ஆயுதம்
கீதம்
புஸ்தகம்
பயம்
பழம்
சுகம்
வாகனம்
விஷம்
தர்மம்
நரகம்
மேகம்
பக்தன்

இப்போதைக்கு இது போதும். அடுத்த பதிவில் என்னுடைய விடையைக் கூறுகிறேன்.

பின் குறிப்பு: இந்தப் பதிவில் ஆரம்பத்தில் போட்டிருக்கும் படத்திலுள்ள பெண்மணி 100 சதம் தமிழ்ப் பெண்மணிதான் என்று தமிழினத்தின் பேரில் உறுதி கூறுகிறேன்.