கொள்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொள்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 14 ஜூன், 2015

கொள்கைப் பிடிப்பு - வைராக்கியம்

                                        Image result for உழைப்பாளர் சிலை


எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். 
     
அ- 67 கு-66


எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப் பெற்றால், அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.


வாழ்க்கையில் எல்லோரும் ஏதோ ஒரு குறிக்கோளுடன்தான் வாழ்கிறோம். சிலர் அவர்கள் நினைத்த குறிக்கோளை அடைகின்றனர். சிலரால் அவர்கள் நினைத்த குறிக்கோளை அடைய முடிவதில்லை. ஏன்?

இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. பொதுவாக அவன் "விதிப் பயன்" என்று எல்லோரும் கூறிவிடுவார்கள். ஆனால் இது சரியா? அனைத்துக் காரியங்களும் விதிப்படிதான் நடக்கிறதென்றால் மனித முயற்சிக்குப் பலன் ஏதும் கிடையாதா?

இது காலம் காலமாகக் கேட்கப்பட்டு வரும் கேள்வி. இதற்குப் பதில்தான் இதுவரை யாரும் சொல்லவில்லை. பதில் கண்டுபிடிப்பதுவும் லேசான காரியம் இல்லை. அப்படிப்பட்ட ஒரு கேள்விக்கு பழனி. கந்தசாமி பதில் தேடுகிறார். என்ன தைரியம் பாருங்கள்.

பலருடைய அனுபவத்தில் நேர்மையாக உழைப்பவர்கள் அப்படி ஒன்றும் சீக்கிரத்தில் மேலுக்குப் போனதாக தெரியவில்லை. தில்லு முல்லு செய்பவர்கள் சீக்கிரம் மேலுக்குப் போவதை கண்கூடாகப் பார்க்கிறோம். இதை அவரவர்கள் விதி என்று சொல்லிவிட்டு நாம் நம் வேலையைக் கவனிக்கப் போய்விடுவோம்.

இங்குதான் நீங்கள் முக்கியமான ஒன்றைக் கவனிக்க வேண்டும். ஒருவனுடைய விதி என்ன வென்று அவனுக்கும் தெரியாது. வேறு யாருக்கும் தெரியாது. ஆனாலும் நாம் உண்மையாக முயற்சி செய்தால் அதற்கு உண்டான பலன் கிடைக்கும் என்று தெய்வப்புலவர் திருவள்ளுவரே சொல்லிப் போயிருக்கிறார்.

தெய்வத்தாலாகாதெனினும் முயற்சி தன்
மெய்வருந்தக் கூலி தரும்.

ஆகவே நாம் ஒவ்வொருவரும் தம்மாலான முயற்சியைச் செய்வது அவசியமல்லவா? இதைத்தான் வைராக்யம் என்கிறோம். இப்படி ஒரு முயற்சி செய்வதைப் பற்றிய ஒரு பாடலைப் படியுங்கள்.

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண் துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண் ஆயினார்.

எல்லோரும் தங்கள் தங்களை முயற்சியினால் வாழ்க்கையில் முன்னேற வாழ்த்துகிறேன். இதில் ஒரு ஒரு முக்கிய பாய்ன்டைக் குறித்துக்கொள்ளவும். இருட்டில் போகும்போது ஒரு விளக்கை கையில் எடுத்தப்போவது போல் இந்த மாதிரி முயற்சிகளுக்கு மோடி மாதிரி அல்லது அதானி மாதிரி ஒரு துணை இருந்தால் உங்கள் முயற்சி 100 சதம் வெற்றியடையும். அந்த மாதிரி துணை கிடைப்பதுவும் உங்கள் முயற்சியினால்தான் சாத்தியமாகும்.