சனி, 30 டிசம்பர், 2017

33. தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பது.

                                            Image result for மாடு பிடித்தல்

ஆனாலும் சும்மா சொல்லப்படாது. நம் இந்தியர்கள் வாய்ச்சொல்லில் அசகாய சூரர்கள். தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பதில் கை தேர்ந்தவர்கள்.

நான் அப்போதே சொன்னேன். ஆனா காசை வாங்கிட்டு இந்த அதிகாரிகள்தான் அனுமதி அளித்தார்கள் என்று எப்போதும் எதிர்க் கட்சிக்காரன் சொல்லிக்கிட்டுத் தான் இருப்பான்.

ஆனா இவனும் அந்தக் காசில் பங்கு வாங்கிக்கொண்டு வாயையும் **ச்சையும் மூடிக்கொள்வான்.

எப்படியோ இந்திய ஜனத்தொகையில் 14 பேரை சில நொடிகளில் குறைத்தாய் விட்டது.

என்ன பரிதாபம் என்றால் இதுவும் சில நாட்களில் மறந்து போகும். கும்பகோணம் பால் மணம் மாறாத சிறார்களின் மறைவை விடவா இது கொடியது?

சனி, 23 டிசம்பர், 2017

32. சங்கீதக் கச்சேரிகளும் மைக்குகளும்


                                    Image result for மார்கழி கச்சேரிகள்

நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் தெருவில் ராம நவமிக்காக கச்சேரிகள் நடக்கும். எங்கள் வீட்டிற்கு நன்றாகக்  கேட்கும். அப்படிக்கேட்டு கேட்டுத்தான் எனக்கு கர்னாடக சங்கீதத்தின் பேரில் ஒரு ஈடுபாடு வந்தது.

மதுரை மணி அய்யர், மதுரை சோமு, அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், எம்.எம். தண்டபானி தேசிகர், ஆலங்குடி சகோதரர்கள், காருகுறிச்சி அருணாசலம் முதலானவர்களின் கச்சேரிகளைக் கேட்டிருக்கிறேன். இந்த வித்வான்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்ப்பதற்காக கச்சேரி நடக்கும் இடத்திற்கும் போவேன். ஒரு அரை மணி நேரம் உட்கார்ந்து விட்டு திரும்பி விடுவேன்.

அப்போதெல்லாம் மேடையில் ஒரே ஒரு மைக் மட்டும்தான் வைப்பார்கள். வார்ப்பாட்டுக்காரருக்கு எதிரில் ஒரு ஒன்றரை அடி தூரத்தில் இந்த மைக் இருக்கும். கச்சேரியில் நடக்கும் வாய்ப்பாட்டு, பிடில், மிருதங்கம், கடம் ஆகியவைகளின் தொனி நன்றாகக் கேட்கும். அப்போதைய வித்வான்கள் மைக் வருவதற்கு முன்பே பாடுவதற்கு பழகியவர்கள். பெரிய கூட்டங்களில் கூட மைக் இல்லாமல் பாடக்கூடியவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.


                          Related image

பிறகு கொஞ்ச வருடங்களை கழித்து ஒவ்வொரு வித்வானுக்கும் தனித் தனி மைக்குகள் வைக்க ஆரம்பித்தார்கள். இங்குதான் வில்லங்கம் ஆரம்பமாகியது. சில வித்துவான்கள் மைக் காரருடன் ரகசிய ஒப்பந்தம் போட்டுக்கொண்டு அவர்களின் மைக்குக்கு மட்டும் ஒலியைக் கூட்டுமாறு செய்தார்கள்.

ஒரு கட்டத்தில் இந்த சதி வேலைகளுக்கு எல்லையில்லாமல் போயிற்று. அப்போது இருந்த பாலக்காடு மணி என்பவர் பிரபல மிருதங்க வித்வான். அவர் மிருதங்க வாசிப்பு அவ்வளவு நன்றாக இருக்கும். அதனால் அவருக்கு ஏகப்பட்ட கிராக்கி. இந்த மைக் சதிகளைப்  பார்த்து பொறுக்க மாட்டாமல் இனி மைக் வைக்கும் கச்சேரிகளுக்கு நான் மிருதங்கம் வாசிக்க வரமாட்டேன் என்று சொல்லி விட்டார்.

அவருடைய வாசிப்புக்காகவே பல கச்சேரிகள் மைக் இல்லாமல் நடந்தன. பிறகு காலம் மாறி விட்டது. பாலக்காடு மணி அய்யரும் போய்ச்சேர்ந்து விட்டார்.

1970 களில் என்று நினைக்கிறேன். அப்போது குமாரி - காயத்திரி அவர்களின் வீணைக் கச்சேரி அன்றைய புரந்தரதாஸ் அரங்கில் (கோவை) நடை பெற்றது. வீணையின் நாதம் கணீரென்று பது விதமாக இருந்தது. நன்றாக இருக்கிறது என்று பேசிக்கொண்டோம். பிறகுதான் அதன் ரகசியம் வெளியானது. காயத்திரியின் தந்தை சினிமா உலகத்தில் ஒரு சவுண்ட் இன்ஜினீயர். அவர் வீணையில் ஒரு ஸ்பெஷல் மைக்கைப் பொருத்தி அதை கச்சேரி ஆடியோ சிஸ்டத்துடன் இணைத்து விட்டார்.

வீணையின் நாதம் அட்டகாசமாக கேட்டது. பிறகு இந்த டெக்னிக்கை எல்லோரும் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இன்று கடத்திற்குக்கூட இந்த மாதிரி மைக் பொருத்தும் டெக்னிக்கை ஆரம்பித்து விட்டார்கள்.

தவிர இப்போது பாடும் வாய்ப்பாட்டுக்  காரர்களின் பாட்டு எதிரில் முதல் வரிசையில் உட்கார்ந்திருப்பவர்களுக்கு கூட சரியாக காதில் விழாது. அவ்வளவு குரல் வளம். ஆகவே அவர்களின் வாய்க்கருகே இரண்டு அங்குலம் தள்ளி மைக் வைக்கப்படுகிறது. தவிர ஒவ்விருவருக்கும் தனித்தனி மைக். மிருதங்க வித்வானுக்கு இரண்டு மைக். இனி பாடகரின் தாவாக்கொட்டையில் மைக் வைக்க வேண்டியதுதான் பாக்கி.

                                             Image result for mic in carnatic music

இந்த முறையில் ஒவ்வொரு வித்வானும் அவரவர்கள் மைக்கை அட்ஜஸ்ட் செய்கிறார்கள். மொத்தத்தில் இன்று நாம் கேட்கும் கச்சேரிகள் முற்றிலும் சின்ந்தெடிக் ஆக மாறி விட்டது. இது மட்டுமா? கச்சேரிகளில் இன்று தம்புரா என்பது ஏறக்குறைய மறைந்து போய்விட்ட ஒன்றாக ஆகி விட்டது. அதற்கு எலெக்ட்ரானிக் சுருதிப்பெட்டி வந்து விட்டது.

அந்தக்காலத்தில் கச்சேரிகள் நான்கு ஐந்து மணி நேரம் நடக்கும். வாய்ப்பாட்டுக்காரரைத் தவிர வேறு யாரும் தண்ணீர் அருந்தினதை நான் பார்த்ததில்லை. இன்று கச்சேரியில் ஒவ்வொருவர் பக்கத்திலும் இரண்டிரண்டு வாட்டர் பாட்டில்கள்.

இவ்வாறாக கர்னாடக சங்கீதம் கம்ப்யூட்டர் சங்கீதமாக மாறிக்கொண்டு வருகிறது.

                                 Image result for carnatic music

திங்கள், 18 டிசம்பர், 2017

31. காதல் கல்யாணம்

                                      Image result for காதலர்கள் படங்கள்
ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்க்கை நடத்துவதுதான் இல்லறம். ஆனால் அந்த வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்குவது பணம். பணம் இல்லையேல் முற்றும் துறந்த முனிவர்களினால் கூட வாழ முடியாது.

தற்போது செய்தித்தாள்களில் பிரபலமாக இருக்கும் கௌசல்யா-சங்கர் காதலை எடுத்துக்கொள்வோம். அவல்களின் கல்யாணம் நடக்கும்போது கௌசல்யாவிற்கு 18 வயது, சங்கருக்கு 21 வயது. அப்போதுதான் இருவரும் மேஜர் ஆகியிருக்கிறார்கள். இருவரும் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். சங்கரின் குடும்பம் ஏழ்மையின் விளிம்பில்தான் இருந்தது என்று யூகிக்கிறேன்.

காதல் சினிமாவில் வேண்டுமானால் உயர்வாகக் காட்டப்படலாம். ஆனால் யதார்த்த த்தில் காதல் கல்யாணங்கள் பெரும்பாலும் தோல்வியில்தான் முடிகின்றன.

இந்த நிலையில் அவர்கள் எந்த அடிப்படையில் கல்யாணம் செய்து கொண்டார்கள் என்று எனக்குப் புரியவில்லை. காதல், சாதி வெறி ஆகியவை ஒருபுறம் இருக்க, அவர்கள் கல்யாணம் செய்துகொண்டு வாழ்வதற்கான பொருளாதார பலம் அவர்களுக்கு இல்லை. அந்த நிலையில் தங்களுக்கு கல்யாணம் அவசியமா என்ற சிந்தனை வராதா?

எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அவர்கள் கல்யாணம் செய்து கொண்டார்கள்?

இது எனக்கு ஒரு புரியாத புதிராக இருக்கிறது.

செவ்வாய், 12 டிசம்பர், 2017

30. பிட் காயின் எனும் மகா மோசடி


பிட்காயின் வேண்டுமா என்று நான் ஒரு பதிவு போட்டிருந்தேன். அது ஒரு நையாண்டிப் பதிவு என்பது எல்லோருக்கும் புரிந்திருக்கும். அந்தப் பதிவில் பலர் இந்த பிட்காயினைப் பற்றி விவரமான பதிவு ஒன்று போடுங்கள் என்று விருப்பப்  பட்டிருந்தார்கள்.

அவர்களுக்காக நேற்று இரவு முழுவதும் விழித்திருந்து ஆராய்ச்சி செய்ததில் எனக்குத் தெரிய வந்த சில உண்மைகளை இங்கே பகிர்கின்றேன்.

1. மிக மிக அரிய மூளை உள்ள ஒருவன் இதில் ஈடுபட்டிருக்கிறான். பிட்காயின் என்பது அவன் மூளையில் உதித்த ஒரு பக்கா ஃப்ராடு ஐடியா.

2. பிட்காயின் என்பது ஒரு மாயை. ஒரு வித ஏமாற்று வழிகள் மூலம் அப்படி ஒன்று இருப்பதாக பலரை நம்ப வைத்திருக்கிறான். நம்ம ஜனங்கள்தான் இப்படிப்பட்ட ஏமாற்றுத் திட்டங்களில் பலாப் பழத்தை மொய்க்கும் ஈக்கள் மாதிரி தங்கள் பணத்தைக் கொண்டு போய் கொட்டுவார்களே.

நம் ஊரில் நடந்த ஈமு கோழித்திட்டம் நல்ல உதாரணம்.

3. இந்த பிட்காயினை உற்பத்தி செய்பவர்கள் ஊரில் உள்ள இளிச்சாவாயன்களைக் கண்டு பிடித்து அவர்கள் தலையில் இந்த பிட்காயின்களைக் கட்டுகிறார்கள். 

4. அந்த இளிச்சவாயன்கள் சாதாரண இளிச்சவாயன்கள் இல்லை. பெரிய பெரிய பிசினஸ் மேக்னட்டுகள். அவர்களுக்கு உள்ள ஒரே கவலை, அவர்களிடம் இருக்கும் கணக்குக் காட்டாத பணத்தை எப்படி பத்திரப்படுத்துவது என்பதுதான்.

5. அவர்களுக்கு இந்த பிட்காயின் ஒரு வரப்பிசாதமாக வாய்த்தது. இதில் பணத்தைப் போட்டால் பணம் எங்கிருக்கிறது என்று ஒருவருக்கும் தெரியாது.

6. இவர்கள் போடும் பணம் எங்கே போகிறது என்று அந்த ஒரிஜினல் பக்காத் திருடனுக்கு மட்டுமே தெரியும்.

7. இந்த பிட்காயினைக் கொண்டு ஆயிரம் வித்தைகள் செய்யலாம் என்பது அண்டப்புளுகு.

8. இந்த பிட்காயினுக்கு விலை நிர்ணயம் செய்வது அந்த பக்காத்திருடனே.

9. இந்தப் பிட்காயினுக்காக தனி ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ் ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ்ஐ நடத்துபவர்களும் வடிகட்டின அயோக்கியர்களே.

10. அவர்கள் காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத்துணிந்தவர்கள்.

11. ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ்  என்ன வேலை செய்யும்? பிட்காயினை ஒருவன் விற்கிறான் என்றால், யாராவது வாங்குபவர்கள் இருக்கிறார்களா என்று பார்ப்பார்கள். அப்படி இரண்டு பார்ட்டிகளும் கிடைத்து விட்டால் இவனிடம் இருந்து அவனுக்கு இந்த பிட்காயினைக் கைமாற்றி விட்டு இவனுடைய கமிஷனை எடுத்துக்கொள்வான்.

12. இந்த வியாபாரத்தில் ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ்  ஒரு புரோக்கர் மட்டுமே. பிட்காயின் செல்லுமா செல்லாதா என்பதற்கு அவன் எந்தக் கேரன்டியும் தரமாட்டான். எல்லா ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ்களும் இந்த விதமாகத்தான் செயல்படுகின்றன.

இந்த உலகமகாத் திருட்டு இன்னும் சில நாட்களில் அம்பலமாகப்போகிறது. பார்த்து அனுபவியுங்கள். பதிவர்கள் யாரிடமும் இந்த பிட்காயின் வாங்கும் அளவிற்கு வசதி இல்லையாதலால் அவர்கள் எந்த வருத்தமும் பட வேண்டியதில்லை.

திங்கள், 11 டிசம்பர், 2017

29. பிட் காயின் வேண்டுபவர்கள் அணுகவும்.


பிட் காயினைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இல்லையென்று நம்புகிறேன். இனி உலக முழுவதும் பிட் காயின்தான் புழக்கத்திற்கு வரப்போகிறது.

இதன் விலை 2017 ம் ஆண்டு துவக்கத்தில் 1000 டாலராக இருந்தது இப்போது 15000 டாலராக இருக்கிறது. என்ன ஒரு வளர்ச்சி பார்த்தீர்களா? 2016 ம் ஆண்டில் ஒரு 100 பிட் காயின் வாங்கிப் போட்டிருந்தால் இன்று நீங்கள் ஒரு கோடீஸ்வரர்தான்.

இந்த விவகாரத்தில் ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால், இந்த பிட்காயின் எங்கே கிடைக்கும் என்பதுதான். இப்படி மக்கள் வகை தெரியாமல் திண்டாடுகிறார்களே என்று நான் இதைப் பற்றி ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டேன்.

ரகசியமாக விசாரித்ததில் இந்த பிட் காயினை ஒரே ஒருவர்தான் தயாரிக்கிறார் என்பதுவும் அவர் வட துருவத்தில் யாரும் கண்டு பிடிக்க முடியாத இடத்தில் தன் கம்ப்யூட்டருடன் வசிக்கிறார் என்பதுவும் தெரிய வந்தது. அவருக்கு பல இடங்களில் ரகசிய ஏஜண்டுகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதுவும் தெரிய வந்தது.

இதில் ஒருவர் எனக்கு தற்செயலாக அறிமுகம் ஆனார். அவர் எனக்கு எவ்வளவு பிட்காயின் வேண்டுமானாலும் வாங்கிக்கொடுக்கிறேன் என்று உறுதி அளித்திருக்கிறார். இன்றைய தேதியில் ஒரு பிட்காயினின் விலை 10 லட்சம் ரூபாய். தேவைப் படுபவர்கள் எவ்வளவு பிட்காயின் வேண்டுமோ அவ்வளவிற்கான தொகையை என்னுடைய ஸ்டேட் பேங்க் கணக்கில் கட்டிவிட்டு அந்த விபரத்தை எனக்குச் சொன்னால் அவர்களுக்கு இந்த பிட் காயின்கள் அனுப்பி வைக்க முடியும். 

பிட்காயின்களை நேரில் பார்க்கமுடியாது. அவைகள் உங்களுக்கு ஒரு கணக்கு ஆரம்பித்து அந்தக்கணக்கில் இந்த பிட்காயின்களை சேர்த்து விடுவோம். இந்தக்கணக்கு விபரங்கள் எங்கள் கம்பயூட்டரில் மிகவும் பத்திரமாகப் பாதுகாக்கப்படும். இதன் விலை ஏற ஏற உங்கள் பிட்காயின்களின் மதிப்பும் ஏறிக்கொண்டே போகும். இந்த பிட்காயின்களின் மதிப்பை எண்ணிக்கொண்டே நீங்கள் மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கலாம்.

இன்னும் சில மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து இந்த பிட்காயின் என்னும் கோபுரம் சீட்டுக்கட்டு கோபுரம் மாதிரி சரிந்து விடும். ஆனால் எங்களிடம் வாங்கிய பிட்காயின்கள் அப்படியே இருக்கும். அதில் எந்த வித மாற்றமும் ஏற்படாது. அப்போது தங்கள் பிட்காயினுக்கு பணம் வேண்டுபவர்கள் அன்றைய மதிப்பு எவ்வளவோ அந்த நிலவரத்திற்கு பணம் பெற்றுக்கொள்ளலாம். (எங்களுடைய கணிப்பு - அன்றைய தேதியில் ஒரு பிட்காயின் ஏறக்குறைய நூறு ரூபாய் இருக்கும்)

நம்பிக்கைதான் வாழ்க்கை. நம்பிக்கையோடு எங்களிடம் பிட்காயின் வாங்கி பயனடையுங்கள்.

வாழ்க பிட்காயின். வாழ்க இவ்வைகயம்.

ஞாயிறு, 3 டிசம்பர், 2017

28. டாக்டர்களுக்கும் கிளினிகல் லேப்களுக்கும் உள்ள உறவு

                                                Image result for clinical laboratory

இன்றைய தலைப்புச் செய்திகளில் ஒரு செய்தி பார்த்திருப்பீர்கள்.

கிளிக்கல் லேப்கள் டாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கின்றனவாம். இந்த அதிசய உண்மையை இன்கம்டாக்ஸ் அதிகாரிகள் பெங்களூருவில் கண்டு பிடித்திருக்கிறார்கள். இது பற்றிய உண்மைகள் ஒருபுறம் இருக்க-

இன்னொரு செய்தி-

ஆங்கிலத்தில்-

While the labs searched have declared an undisclosed income of over Rs 100 crore, the amount of referral fee in case of a single lab is more than Rs 200 crore, it said in a statement.

அதாவது ஒரு லேபில் மட்டும் சுமார் 200 கோடி இந்த மாதிரி டாக்டர்களுக்குக் கொடுத்ததாக கணக்கு காட்டியிருக்கிறார்களாம். இது ஒரு வருடத்திற்கு என்று வைத்துக்கொள்ளலாம். சுமாராக 20 % கமிஷன் என்று வைத்துக்கொண்டால் அந்த லேப்பில் வருடத்திற்கு 1000 கோடி பிசினஸ் நடந்திருக்க வேண்டும். ஆதாவது ஏறக்குறைய ஒரு நாளைக்கு 3 கோடிக்கு பிசினஸ். இப்படி 3 கோடி பிசினஸ் செய்யக்கூடிய கிளினிக் லேப் பெங்களூரில் இருக்கிறதா?

எனக்கு நம்பிக்கை வரவில்லை. யாருக்காவது தெரிந்திருந்தால் சொல்லுங்கள்.

திங்கள், 27 நவம்பர், 2017

27 - தற்கொலை செய்வது எப்படி?

                                                         Image result for தற்கொலை செய்து கொள்வது எப்படி
தற்சமயம் செய்தித் தாள்களில் தற்கொலைச் செய்திகள் அதிகமாக வருகின்றன. சாதாரண, அன்றாடம் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சினைகளுக்காக தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

ஒரு ஆசிரியை மாணவிகளைத் திட்டினார் என்பதற்காக நான்கு மாணவிகள் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்திருக்கிறார்கள். புருஷனுடன் சண்டை போட்டு விட்டு குழந்தைகளுடன் பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

பெற்றோர் செலவிற்கு காசு கொடுக்கவில்லை என்பதற்காக தற்கொலை செய்து கொள்பவர்கள் ஏராளம். தான் விரும்பிய படிப்பில் சேர்க்கவில்லை என்பதற்காக என் உறவினர் பையன் உயிரை மாய்த்துக்கொண்டான்.

ஏன் இவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் சாதாரணப் பிரச்சினைகளுக்கு மனமொடிந்து போகிறார்கள் என்று புரியவில்லை. இவர்களின் வளர்ப்பு முறையில் ஏதாவது கோளாறு இருக்கிறதா? அல்லது இவர்கள் வாழும் சமுதாய சூழ்நிலை இவர்களைப் புறக்கணிக்கிறதா?

எனக்கு ஒன்று புலனாகிறது. அதாவது இன்றைய சூழ்நிலையில் இளைஞர்களுக்கும் வளர்ந்தவர்களுக்கும் இடையில் ஒரு பெரிய இடைவெளி உண்டாகியிருக்கிறது. இன்றைய குடும்பம் ஒரு தாய் தகப்பன் ஒரு பிள்ளை என்பதாக இருக்கிறது. வளரும் பிள்ளைகளுக்கு வாழ்க்கையைப் பற்றித் தெரிந்து கொள்ள உதவ பெற்றோர்களுக்கு நேரமில்லை.

எந்நேரமும் டிவி, சினிமாக்களைப் பார்த்துக்கொண்டு குழந்தைகளின் வளர்ப்பில் அக்கறை காட்டுவதில்லை. பணக்காரர்களின் வீட்டில் மட்டுமல்ல, நடுத்தர மக்களின் வீட்டிலும் இப்படித்தான் நடக்கிறது. வாழ்க்கையைச் சந்திக்க வேண்டிய மன தைரியத்தை பிள்ளைகளிடம் ஏற்படுத்த வேண்டிய கடமையிலிருந்து பெற்றோர்கள் தவறி விடுகிறார்கள் என்று படுகிறது.

படிப்பு என்பது வாழ்க்கையைப் புரிந்து கொள்வது என்பது போய் மார்க் வாங்குவதற்கு மட்டும் என்று ஆகிவிட்ட பிறகு பிள்ளைகளுக்கு நல்ல மார்க் வாங்குவதுதான் வாழ்க்கை என்று ஆகி விட்டது.  அக்கம் பக்கத்தில் இருக்கும் மற்ற பிள்ளைகளுடன் விளையாடுவதோ பழகுவதோ அரிதாகி விட்டது. உலகம் என்றால் படிப்பும் மார்க்கும் என்று ஆகிவிட்ட நிலையில் அவர்களுக்கு வாழ்க்கைப் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டிய மனத்துணிவு இல்லை.

பெற்றோர்களும் ஆசிரியர்களும் இந்தப் பிரச்சினையை ஆழ்ந்து சிந்தித்து தீர்வு காணாவிட்டால் எதிர்கால சமுதாயம் மனத்துணிவற்ற ஒரு சமுதாயமாக மாறிவிடும்.

வெள்ளி, 24 நவம்பர், 2017

26. கல்யாணங்களில் மேக்கப் கலைஞர்களும் விடியோக்காரர்களும்.

                                                 Image result for marriage makeup in tamilnadu
இரண்டு நாட்களுக்கு முன் நெருங்கிய உறவினர் வீட்டுப் பெண்ணின் கல்யாணத்திற்குப் போயிருந்தேன். கல்யாண சடங்குகளை மேற்பார்வை பார்த்துக்கொள்ளுமாறு பெண்ணின் தாயார் என்னைக் கேட்டுக்கொண்டார்கள். காலை சரியாக 9 மணிக்கு சடங்குகளை ஆரம்பித்து விடவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள்.

நானும் அதே போல் உறவினர்களை எல்லாம் தயார் பண்ணி வைத்திருந்தேன். 9 மணிக்கு மணப்பெண் மேடைக்கு வரவேண்டும். 9 மணி, 9.15, 9.30, 9.45, 10 மணியும் ஆகி விட்டது. மணப்பெண் வருவதாகக் காணோம். மணப்பெண்ணின் அறைக்குப் போய் பெண்ணின் தாயாரிடம் '' என்னம்மா, ஏன் இப்படி லேட்'' என்று கேட்டேன்.

மேக்கப் போடும் அம்மா விடமாட்டேன் என்று சொல்கிறாள் என்று பதில் வந்தது. ஏம்மா, மேக்கப்காரியிடம் முதலிலேயே இந்த நேரத்திற்குள் மேக்கப்பை முடிக்கவேண்டும் என்று சொல்லவில்லையா என்று கேட்டேன். சொன்னதுதானுங்க, ஆனால் இப்போது சொன்ன நேரத்திற்குள் மேக்கப்பை முடிக்க வில்லையே, நான் என்ன செய்வது என்று புரியவில்லை என்று பெண்ணின் தாயார் தன் கஷ்டத்தைச் சொல்லி புலம்பினாள்.

பல கல்யாணங்களில் இப்படித்தான் மேக்கப் போடுபவர்கள் அநியாயத்திற்கு காலதாமதம் செய்கிறார்கள். பாதி மேக்கப்பில் பெண்ணை கூட்டி வருவது இயலாத காரியம். கல்யாணக்காரர்களின் பாடு படு திண்டாட்டம்.

அடுத்து கல்யாண சடங்குகள் நடைபெறும்போது இந்த போட்டோக்காரனும் விடியோக்காரனும் பண்ணும் அழும்புகள் இருக்கிறதே அதைச்சொல்லி மாளாது. எந்த சடங்கையும் வந்திருக்கும் உறவினர்கள் பார்க்க முடியாது. இந்த ஆட்கள் சுற்றிலும் நின்று கொள்வார்கள். யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

அதிலும் இவன்கள் செய்யும் இன்னொரு கொடுமை என்னவென்றால், ஒரு சடங்கு முடிந்தவுடன், இவன் எடுத்த போட்டோ சரியாக இல்லை என்றால் அந்த சடங்கை மறுபடியும் செய்யச்சொல்வான். இந்த சடங்குகள் மந்திரங்கள் சொல்லி புனிதமாகச் செய்யப்படுபவை. அதைப்பற்றி இந்த போட்டோக்காரனுக்கு கவலை இல்லை. அவனுக்கு போட்டோ நன்றாக வரவேண்டும். அதற்காக அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான். தாலி கட்டுவதையே இன்னொரு முறை செய்யச்சொன்னாலும் நம் ஆட்கள் செய்யத் தயாராய் இருக்கிறார்கள்.

இனிமேல் கல்யாணத்தை நடத்த இந்த மேக்கப்காரிகளும் விடியோக்காரன்களுமே போதுமானதாக ஆகி விடும். விருந்தினர்கள் போய் தலையைக்காட்டி விட்டு சாப்பிட்டுவிட்டு வருவதோடு சரி. என்னைப் போன்ற கிழங்கட்டைகளுக்கு இந்தக் கூத்தைப் பார்க்க சகிப்பதில்லை. நாம் ஏதாவது சொல்லப்போனால் ''பெரிசு, இதுதான் இந்தக் காலத்து நாகரிகம், உங்க காலம் மாதிரி பொண்ணு தலையைக் குனிஞ்சிகிட்டு இருந்த தெல்லாம் உங்க காலத்தோட போச்சு. பேசாம சாப்பிட்டுட்டுப் போவயா, அது சொத்தை, இது சொத்தைன்னு புலம்பாதே'' என்ற அறிவுரைதான் வரும்.

நம்ம மரியாதையைக் காப்பாத்திக்கணும்னா இந்த மாதிரி வைபவங்களுக்குப் போகாமலிருப்பதுதான் சிறந்தது.

                                       Image result for videographer

திங்கள், 20 நவம்பர், 2017

25. பதிவுலகில் ஒரு குழாயடிச் சண்டை.

பதிவுலகம் சுவையற்றுப் போயிற்று என்று பலரும் கூறுகிறார்கள். அவர்கள் இப்போது வரும் பதிவுகளைப் படிப்பது இல்லை என்று தெரிகிறது. எனது இதற்கு முந்தின பதிவில் வந்திருக்கும் பின்னூட்டங்களைப் படித்து விட்டு பதிவுலகம் சுவையாக இருக்கிறதா இல்லையா என்று தெரிந்து கொள்ளுங்கள்.

http://swamysmusings.blogspot.com/2017/11/24.html

பெயரில்லாஞாயிறு, 19 நவம்பர், 2017 ’அன்று’ முற்பகல் 11:28:00 IST
Please show proof from science You'r making statements in public forum which reach so many Therefore it's your responsibility to add proofs
பதில்கள்


  1. Mr. Nameless,
    Please search the google for this topic. You will find hundreds of articles for and against the drinking of water during meals. Just remember they are all mostly from developed countries where salt intake is very very less than India, especially Tamilnadu.

    Another thing is if I suggest that suicide will end all your problems, will you commit it? Don't you have brain? Should you not analyse any information you come across for its relevance to you?

    Opinions expressed in blogs are only one's own perceptions and following them is at your own discretion.

    Why do you hide behind the "Nameless"? You are not traceable. It is total cowardice.
    நீக்கு
  2. Mr Kandasamy

    No it's not cowardice. Just because there's a facility in Google blogs, like in yours, for posting anonymously, readers use it to post comments. It cannot be called hiding ID cowardly as your blog posts are on ordinary matters of everyday life like eating and sleeping and my comments thereon are decently worded. There's no secret sharing of information or like that. Why shouldn't comments be anything - with ID or w/o it? Your blog is open to all to read and post.

    Different readers may have different reasons for posting anonymously. My reason is that it is my comments, not my ID, which are relevant to you. My name is useless to you. Still you can put up a disclaimer that unanymous comments won't be entertained This will help me to know you are interested in the ID of your commentators and I'll definitely post with name.

    Now that you want to know, let me inform you that my name is Pa Vinayagam. I post my feedback comments in many blogs in that name; and sometimes, out of laziness, unanimously They're decently worded in English and in Tamil I have a blog in English https://throughalookingglassalaymanreflects.wordpress.com

    Next my comments on the contents of your message
  3. You are posting scientific information Whether to drink water with meal or not is a medical information But you have not adduced any basis for that If it is an ordinary personal experience it is ok to write w/o any supporting evidence But it is a medical information Your argument is ''I'll post any medical information w/o any evidence and it's for readers to go and trace the evidence'' No one will accept that It's your responsibility to give that also

    Next you say readers should not lap up what's offered by you. In that case readers won't take you seriously. You are an old man with a lot of experiences in life and readers look upon you with confidence. You are saying in effect that they shouldn't take you seriously at all.

    If I go to google for such information, why should I come to you?

    Pa Vinayagam
    https://throughalookingglassalaymanreflects.wordpress.com
  4. தமிழ்மணத்தில் ''மறுமொழியாளர்கள்எ'' என்ற பகுதியைத் திறந்து என் பெயரையும் நான் போட்ட மறுமொழிகளையும் பார்க்கலாம்.

    Pa Vinayagam
    https://throughalookingglassalaymanreflects.wordpress.com
    நீக்கு
  5. Mr. ......

    Blog is there to share personal experiences. It is not a scientific journal. For expressing personal experiences, I don't think that I have to quote references.

    Learning from others experience is one way of gaining knowledge. One need not blindly believe in other's experiences. It is only to stimulate one's thinking and not more than that.

    As I have already mentioned that if I say suicide is a panacea for all human problems and if somebody takes it literally, it is foolishness.

    Anyhow I am immensely thankful to you for having taken pains to answer my comments.

    Hope you are aware that such arguments should not be taken as personal affrontation and we should stop at that level.
    நீக்கு
  6. No I disagree. It may be your personal experiences but your blogpost gives medical information based on your experiences: digestion and what induces or prevents it. Perfect medical matter.

    All medical information is based on a variety of personal experiences of various people. To arrive at a medical discovery, physicians may examine 1000s of people. Sometimes on themselves also. (the theme of the famous novel Dr Jekyll and Mr Hide). Your doctor, in wanting to know what is ailing you and the reasons for that, asks you first about your personal history: What have you eaten last? Have you had a sound sleep? etc.

    Whether readers may themselves go and examine the basis for your post or not is your guess or wish.

    You've known my name. Has it helped you in any way? Your name doesn't matter to me at all. If it is any other Samy, instead of Kandasamy, will the meaning of your words change? A rose by any other name will smell as sweet !

    Your age and your attitude are quite at variance. Usually people mellow with age but in your case, you are hardening with age. As we grow old, we grow to take men and matters philosophically and become more forgiving. Your are an octogenarian now. Even if you become a nonagenarian or centenarian, that life will be lonely with your faculties going down. Lets bid farewell to all - our loved ones and others - with a smile on our faces. It's too late to be a gentleman. Be quick and smile.

    Let not the world say: 'He left the name at which the world grew pale !'

    With these words (not mine, but Samuel Johnson's), bidding farewell to you. I'll never enter here.
    நீக்கு
  7. Dear Mr. ...
    You may disagree with many things I write about. But it is a known fact that when people have no valid points to argue, they resort to personal abuse. That is what you are doing now. I have no grievance against you for this because this is the normal human behaviour of which you are no exception.

    Wish you get the meaning of what I say.
  8. ஒரு டவுட் ,தண்ணி குடிக்கும் போது சாப்பிடலாமா?
    பதில்கள்


    1. இது எல்லாக் குடிமகன்களும் செய்வதுதானே. இதில் என்ன டவுட்?
  9. இந்தக் கடைசி கேள்வியும் பதிலும்தான் கிளைமாக்ஸ்.

  10. பின் தொடர்ச்சி - Extracts from Google Articles.
  11. I heard that it's bad to drink water (or other fluids) during meals. ... But if anything,drinking water helps your stomach liquefy food, which aids in digestion and nutrient absorption; it may also prevent constipation and bloating by softening stools and keeping your digestive tract lubricated.Jun 17, 2015
    I heard that it’s bad to drink water (or other fluids) during meals. Is that true?
    Actually, the opposite is true: It’s great to have a glass of water with you at the table. Some folks claim that consuming fluids with your food dilutes the bile and stomach acid needed to break down and absorb nutrients. But if anything, drinking water helps your stomach liquefy food, which aids in digestion and nutrient absorption; it may also prevent constipation and bloating by softening stools and keeping your digestive tract lubricated. Drinking H2O with your meals can also keep you from overeating. It helps fill you up faster and also encourages you to take breaks from your food, causing you to slow down and check in with your hunger signals.
    Health‘s medical editor, Roshini Rajapaksa, MD, is assistant professor of medicine at the NYU School of Medicine and co-founder of Tula Skincare.

    Drinking Water During Meals

    by Veronica
    (Hartford, Connecticut)
    Here I will answer the question asked by Veronica, "Why can't you drink water while you eat food?" Though doctors can recommend that there is nothing wrong with drinking water during meals. As per yogic/ ayurvedic philosophy you must drink lot of water throughout the day, but avoid drinking water during meals. The stomach must not be heavily loaded. Half of the stomach should be filled with solid food, one fourth with watery portion and leave one fourth empty.

    Also, keep in mind that fruits and vegetables itself contain large amount of water. It is recommended to drink minimal amount of water half an hour prior to eating meals and two hours after meals.

    But there cannot be a hard and fast rule for drinking water. You may have to drink water if you are having meals after a hard day of work in hot and dry climate. The amount of water you drink depend on weather conditions and your physical activity levels. Also, the amount of water required will depend on type of food you are eating. If food is sattvik and consisting mostly of fruits and vegetables, water requirement will be minimal. Whereas for spicy Tamsik diet, water requirement will be more and you cannot avoid water with meals. 

    Also, remember that efficiency of digestion does not depend solely on the amount of water taken with meals. Take into account nutrition levels of your diet, lifestyle, stress levels and eating habits while analysing your digestion. 

    Water During Meals
    1. Avoid drinking water with your meals. Drinking water with your meals dilutes the gastric juice and slows down the process of digestion in the stomach and intestines. Even if you need to drink water just sip water kept at room temperature. Ideally, Ayurvedic texts recommend sipping minimal amount of plain warm water during meals. 

    2. Cold water during the meals reduces the digestive fire. Digestive enzymes become inactive, digestive process is hampered and leads to accumulation of toxic waste in the body. Hence drinking of iced water, soft drinks, sodas, tea or coffee or alcohol is strictly prohibited. 

    3. Chew your food properly and it will easily pass down to your stomach. Do not drink water to swallow food in a hurry. If required drink water after swallowing food.