வெள்ளி, 30 ஜனவரி, 2015

தமிழ் மொழி அழியுமா?

                                
இன்றைய வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.in/ கலை அரசி என்பவர் எழுதியிருக்கும் கருத்தைக் கவனியுங்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------------------

இன்று நாம் பேசும் தமிழ் எப்படியிருக்கிறது? 

“அலார்ம் வைச்சு இயர்லி மார்னிங் ஏந்திரிச்சி பிரஷ் பண்ணிட்டு ஹீட்டர் போட்டுக் குளிச்சிட்டு பிரேக்பாஸ்ட் முடிச்சி பசங்களுக்கு லஞ்சிக்கு வெஜ் ரைஸ் செஞ்சி டிபன் பாக்ஸு வைச்சிட்டேன்.  ஆட்டோக்காரன் டைமுக்கு வராம லேட் பண்ணிட்டான்,  சன்னுக்கு  எக்ஸாம் வேற. ரொம்ப டென்ஷன் ஆயிட்டான்.  அப்புறம் ஹஸ்பண்ட் பைக்ல கூட்டிட்டுப் போயி ஸ்கூல்ல டிராப் பண்ணிட்டு வந்தாரு. 

அதுக்கப்புறம் எனக்கும் லஞ்சி பாக் பண்ணிட்டு ஸ்கூட்டியை எடுத்தா ஸ்டாட்டிங் டிரபிள்.   ரோடு வரைக்கும் வாக் பண்ணி வந்து ஆட்டோ பிடிச்சேன்.  ரெண்டு சிக்னல்வெயிட் பண்ணி ரவுண்டானா வரும் போது ஹெவி டிராபிக்.  ஒன் அவர் லேட்டாயிடுச்சி..  அதுக்கப்புறம் தேர்டு புளோர் இருக்குற ஆபீசுக்கு ஓடி வந்து சிஸ்டம ஆன் பண்ணி செட்டில் ஆறதுக்குள்ளாற போதும் போதும்னு ஆயிடுச்சி.  லைஃபே ரொம்ப ஹெக்டிக்கா இருக்கு.”     


பார்த்தீர்களா?  இது தான் இன்றைக்கு நாம் பேசும் தமிழ்! ஆங்கிலத்துக்கு இடையே அங்கொன்றும் இங்கொன்றுமாக தமிழ்!  நம்மையும் அறியாமல் பேச்சு வழக்கில் ஆங்கிலம் இரண்டறக் கலந்து விட்டது. 
-------------------------------------------------------------------------------------------------------------------------------
இது உண்மையல்ல என்று எந்தத் தமிழனாவது தன் நெஞ்சில் கை வைத்துச் சொல்ல முடியுமா?

இது ஏன் என்று ஆராய்வது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த நிலை தொடர்ந்தால் என்ன ஆகும் என்று யோசியுங்கள். தமிழ் மொழி அழிந்து போன பிறகு அங்கு தமிழ் இனம் என்பது ஏது?

நான் சில நாட்களுக்கு முன் "பெண்கள் கடைப்பிடிக்கவேண்டிய அறிவுரைகள்" (http://swamysmusings.blogspot.in/2015/01/blog-post_3.html) என்று ஒரு பதிவு போட்டிருந்தேன். அதன் பின்னூட்டத்தில் ஒரு இடத்தில் ஒரு இனத்தின் கலாச்சாரம் அழிந்து போனால் அந்த இனமே அழிந்து விடும் என்று குறிப்பிட்டிருந்தேன். ஒரு இனத்தின் கலாச்சாரத்தில் மிக முக்கியமான பண்பு அவர்கள் பேசும் மொழியாகும். அது அழிந்து போன பிறகு அங்கு தமிழ் இனம் ஏது?

நான் குறிப்பிட்ட பெண்களின் கலாச்சாரப் பழக்க வழக்கங்களை விமரிசித்து மூன்று முன்னணிப் பதிவர்கள் என்னை கேவலமாக விமரிசித்தார்கள். 

அந்த மூன்று முன்னணிப் பதிவர்கள் இந்த மொழிச் சீர்கேட்டுக்கு என்ன தீர்வு சொல்லுவார்கள்?