புதன், 29 ஜூன், 2011

நான் ஆனந்தப்பட்ட தருணம்


பிரிட்டிஷ் பார்லிமென்ட்டில் இருந்து ஒரு பிரபல அரசியல்வாதி ரிடையர்டு ஆனபோது பலர் அவரை “இனி என்ன செய்வீர்கள்” என்று கேட்டார்களாம்.

அவர் மிகவும் சாதாரணமாக சொன்ன பதில் மிகவும் பிரபலம்.
இனி தினமும் “டைம்ஸ் ஆப் லண்டன்” பத்திரிகையை என் பெட்சைடுக்கு டெலிவரி செய்யச் சொல்லிவிடுவேன். காலையில் முதலில் அதை எடுத்து இரங்கல் செய்திகளைப் பார்ப்பேன். அதில் என் பெயர் இல்லாவிட்டால், எழுந்து காலை உணவு சாப்பிட்டுவிட்டு மற்ற வேலைகளைப் பார்ப்பேன் என்றாராம்.

இதில் உள்ள நகைச்சுவை எத்தனை பேருக்குப் புரியும் என்று தெரியவில்லை.

இது போல் நேற்றைய ஒரு பிரபல தமிழ் தினசரியில் கீழே கொடுத்திருக்கும் இரங்கல் செய்தியைப் பார்த்தேன்.

மிக்க ஆனந்தம் அடைந்தேன். ஆஹா, இன்றுடன் நான் இந்தப் பூலோகத்தில் அனுபவித்துக் கொண்டிருக்கும் துன்பங்களுக்கெல்லாம் விடிவு வந்து விட்டது என்று பூரித்துப் போனேன். எப்படி இந்த விடிவு எனக்கு ஏற்பட்டது என்று மேலும் படித்தபோதுதான் உண்மை விளங்கியது.

அது நானில்லை. வெறும் பெயரில் மட்டும்தான் ஒற்றுமை என்று விளங்கியது. மிகவும் ஏமாற்றமாகப் போய்விட்டது.