ஞாயிறு, 29 மே, 2011

கடன் வாங்குதல்


கடனைக்கண்டு சிலர் பயப்படுவார்கள். கடன் வாங்கினால் அதைத் திருப்பிக் கட்டுவது எப்படி? கட்டமுடியாமல் போனால் மானம் போகுமே! என்றெல்லாம் கவலைப்படுவார்கள். இப்படிப்பட்டவர்கள் கடன் வாங்க மாட்டார்கள். தங்கள் வரவுக்குள்ளேயே செலவைக் குறுக்கிக் கொள்வார்கள்.

பலர் இவ்வாறெல்லாம் கவலைப்படுவதில்லை.  இவர்கள் கடனைக்கண்டு பயப்படாதவர்கள்.  கடன்தானே இருக்கட்டுமே. அவனிடம் இருந்தால் அந்தப்பணம் சும்மாதானே இருக்கப்போகிறது. நம்மிடம் வந்ததால் அது பயனுள்ள பல வேலைகளைச் செய்கிறது. நல்ல விஷயம்தானே. இதற்கு ஏன் வீணாக உடம்பை அலட்டிக்கொள்வானேன்?

சரி, அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டாமா? என்றால் அது அவன் (கடன் கொடுத்தவன்) கவலை. நான் ஏன் அதைப் பற்றிக் கவலைப் படவேண்டும்? என்பார்கள்.

இதுதான் கலியுகம்!