செவ்வாய், 12 ஏப்ரல், 2011

ஜனநாயகம் வாழ்க


ஆடுவோமே, பள்ளுப்பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று ஆடுவோமே……….
இன்றுதான் நான் முழு சுதந்திர மனிதனாய் உணர்கிறேன். இது நாள் வரை அகப்பட்டிருந்த பதிவுலக பின்னூட்ட வலையெனும் ஜெயிலிலிருந்து விட்டு, இப்போது அதிலிருந்து வெளிவந்த பின் ஒரு புதிய மனிதனாக உணர்கிறேன். 
இந்தப் பதிவு தொடர்ந்து வரும். பொதுப் பிரச்சினைகள் மட்டுமே பதிவிடப்படும். மற்ற பதிவுகளைப் பற்றியோ, பதிவர்களைப்பற்றியோ எந்தப் பதிவும் வராது.
நாளை தேர்தல் நடக்கும். எரிகிற கொள்ளியில் எது நல்ல கொள்ளி என்று பார்த்து வாக்களிக்கும்படி வாக்காளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். புது ஆட்சி வந்தவுடன் நம் குறைகளெல்லாம் மாயமாகி விடும் என்று நம்புவர்களெல்லாம் நீடூழி வாழ்ந்து சுகம் அனுபவிப்பார்களாக. மற்றவர்களெல்லாம் தீக்குளிக்கட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக