செவ்வாய், 15 டிசம்பர், 2009

வணக்கம்






வணக்கம். உலகம் நன்றாகவே போயக்கொண்டு இருக்கிறது. என்ன, நீண்ட நாட்களாக பதிவு எழுதவில்லை என்ற குற்ற உணர்வு மேலோங்கி நிற்கிறது. இந்த குற்ற உணர்வுகள்தான் நம்முடைய பெரிய தடைக்கல். முதலில் சோம்பல் படாமல் பதிவு எழுதியிருக்க வேண்டும். சரி, அது முடியலையா, எப்போது முடிகிறதோ அப்போது பதிவு எழுதவேண்டியதுதான். அதை விட்டு விட்டு குற்ற உணர்வால் பதிவு எழுதுவதை மேலும் மேலும் ஒத்திப்போடுவதுதான் மிகவும் மோசமான மனப்போக்கு. அதிலிருந்து மீள முயற்சிக்கிறேன்.
பதிவு எழுதத்தான் சோம்பலாக இருந்தேனே தவிர பதிவலகத்தை விட்டு விலகிவிடவில்லை. தினமும் ஒரு மணி நேரமாவது பதிவுலகத்தைப் பார்த்துக்கொண்டு இருந்தேன். இந்த அனுபவத்திலிருந்து நான் தெரிந்து கொண்டது என்னவென்றால், என்னைத்தவிர மற்ற பதிவர்கள் எல்லோரும் மிக மிக சுறுசுறுப்பாய் இருக்கிறார்கள் என்பதுதான். அவர்கள் எழுதும் அளவைப்பார்த்தால் இந்த பதிவு எழுதுவதைத்தவிர அவர்கள் வேறு எந்த வேலையையும் (தூங்குவது உட்பட) பார்க்க முடியாது என்பது என் கணிப்பு. அப்படியானால் அவர்கள் வாழ்க்கைக்கு வேண்டிய பொருளாதாரத்திற்கு என்ன செய்வார்கள் என்று பல இரவுகளில் தூக்கம் வராத சமயங்களில் யோசித்திருக்கிறேன்.  75 வயதில் என்ன தூக்கம் வரப்போகிறது !
பதிவுலகத்திலிருந்து பெரிய வருமானம் வருமென்று தோணவில்லை. ஆகவே அவர்கள் வாழ்க்கைக்கு ஆதாரமாக ஏதோவொரு வேலை பார்த்துக்கொண்டிருக்க வேண்டும். அப்படி ஒரு வேலையில் இருந்து கொண்டு இவ்வளவு பதிவுகள் எழுதுகிறார்கள் என்றால் அவர்களுடைய அபரிமிதமான ஆர்வத்தை மனமாரப்பாராட்ட வேண்டும். பாராட்டுகிறேன்.
அடுத்த பதிவு சீக்கரத்தில்.....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக