வியாழன், 14 மே, 2009

மக்களவைத்தேர்தலும் மாக்களும்.

இன்னுமொரு தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. இந்த தேர்தலில் நான் பார்த்தது என்னவென்றால் ஒருவரும் உண்மை பேசவில்லை. கூட்டணி என்பது மக்களை ஏமாற்றும் வழி. ஏனென்றால் எல்லோரும் சொல்வது என்னவென்றால், இந்த கூட்டணி தேர்தலுக்கு மட்டுமே. தேர்தல் முடிந்த பிறகு நிலைமையைப் பொருத்து யாருடன் வேண்டுமென்றாலும் கூட்டு சேர்ந்து கொள்வோம் என்று. ஆக மொத்தம் யார் அதிகமாக காசு கொடுக்கிறார்களோ அவர்களுக்கு முந்தி விரிக்க தயார். இப்படிப்பட்ட தே....யாக்கள் ஆட்சிக்கு வந்து நாட்டிற்கும் மக்களுக்கும் சேவை செய்யப்போகிறார்கள்.

என்ன சேவை தெரியுமா? மக்களின் தலையை மொட்டை அடிக்கும் சேவைதான். இந்த மகத்தான சேவையில் யார் கூட்டுக்கு வந்தாலும் சரியே, நாங்கள் கூட்டு வைத்துக்கொள்வோம். இதுதான் இன்றைய அரசியல் கட்சிகளின் கொள்கை. இது தவிர இன்னுமொரு சேவை கட்சி பாகுபாடு இல்லாமல் எல்லோரும் செய்யப்போவது என்னவென்றால், தேசசேவை. தேசசேவை என்றால் என்னவென்று சிலருக்கு புரியாமல் இருக்கலாம். அது என்னவென்றால் நம் நாட்டை எதிரிகள் ஆக்ரமிப்பு செய்வதை தடுப்பது. எப்படி என்றால் எங்கு எல்லாம் பூமிகள் கேட்பாரற்று கிடக்கிறதோ அவைகளையெல்லாம் காபந்து பண்ணுவது. எப்படி? அந்த பூமிகளை அப்படியே விட்டு வைத்திருந்தால் பாகிஸ்தான் போன்ற நாடுகள் படையெடுத்து வந்து அவைகளை ஆக்கிரமிப்பு செய்து விடுவார்கள். ஆகவே அவைகளை தன் சொந்தப்பொருப்பில் வைத்திருந்து காப்பாற்றி வருங்கால சந்த்தியின்றுக்கு கொடுப்பார்கள். வருங்கால சந்த்தியினர் என்றால் யாரென்று தெரியாதவர்கள் அவர்கள் வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள புளியமரத்தில் தூக்கு போட்டுக்கொள்ளலாம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக